என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு உரிமையாளர்"

    • வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும்.
    • வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும்.

    சென்னை:

    வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் விதிமுறைகள்படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன. இதன்படி இனி 2 மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் போதுமானது, வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தில் வீடு வாடகைக்கு எடுப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் என இருதரப்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் உள்ளன.

    அவற்றின் முக்கியமான சில அம்சங்கள் பின்வருமாறு:-

    * வீட்டை வாடகைக்குவிட்டால், அந்த ஒப்பந்தந்தை உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும். முன்பு சாதாரண ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டால் போதுமானதாக இருந்தது. ஆனால், புதிய சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.

    * ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக்கூடாது.

    * வீட்டு வாடகைக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக்கூடாது. வணிக கட்டிடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.

    * ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்துதான் வாடகையை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவதற்கும் 2 மாதங்கள் முன்பே நோட்டீசு மூலம் வாடகைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    * வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே அதனை சரி செய்துகொண்டு, வாடகைதொகையில் கழித்துக்கொள்ளலாம்.

    * வாடகைக்கு இருக்கும் வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைக்கும்போதெல்லாம் நுழையமுடியாது. 24 மணிநேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.

    * வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்தக்கூடாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சேதம் ஏற்படுத்துதல் என குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல் காலி செய்ய வற்புறுத்தக்கூடாது.

    * வாடகை தகராறு வழக்கு, வீட்டை காலி செய்யும் வழக்கு போன்றவற்றுக்கு இனி 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.

    * வீட்டு வாடகை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டும். சிறிய அல்லது நடுத்தர வாடகை வீட்டினருக்கு டி.டி.எஸ். விலக்கு வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    பதிவு செய்வது எப்படி?

    வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும். இதனை சாா் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆதார், பான் அட்டை என ஏதேனும் ஒரு ஆவணம் போதுமானது. வாடகைதாரர்களுக்கு குறைவான முன்பணம், திடீர் வாடகை உயர்வு, சட்டப் பாதுகாப்பு போன்ற பலன்கள் இதன்மூலம் வலியுறுத்தப்படும். வீட்டு உரிமையாளர்களுக்கு வரி நன்மைகள், வாடகை வசூல் எளிது, வலுவான ஆவணம் உருவாக்கம், தகராறுகளுக்கு தீர்ப்பு, மோசடி ஆகியை தடுக்கப்படும்.

    • வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் மீது சில சோதனைகளை நடத்த வேண்டும்.
    • வாடகைக்கு இருப்பவர் ஒரு வெளிநாட்டவராக இருந்தால், அவரது பெயர், பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை வழங்கப்பட வேண்டும்.

    மும்பை:

    சமூக விரோத சக்திகள் மக்கள் அதிகம் புழங்கும் குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருந்து நாசவேலைகளில் ஈடுபடுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக குடியேறும் வெளிநாட்டினரை கண்காணிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள அனைத்து வீட்டு உரிமையாளர்களும் தங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்களை போலீசாரின் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

    போலீசாரின் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    வாடகைக்கு இருப்பவர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் அல்லது சமூக விரோத சக்திகள் நாசவேலை நடவடிக்கைகள், கலவரங்கள், மோதல்கள் போன்றவற்றை ஏற்படுத்தாமல் இருக்க வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் மீது சில சோதனைகளை நடத்த வேண்டும்.

    ஒவ்வொரு வீட்டு உரிமையாளர், ஓட்டல், லாட்ஜ், விருந்தினர் மாளிகை போன்ற சொத்துகளை வாடகைக்கு விட்டுள்ளவர்கள் தங்கள் இடத்தில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்களை உடனடியாக மும்பை போலீசாரின் போர்ட்டலில் வழங்க வேண்டும்.

    வாடகைக்கு இருப்பவர் ஒரு வெளிநாட்டவராக இருந்தால், அவரது பெயர், பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை வழங்கப்பட வேண்டும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு 31(நேற்று) முதல் வருகிற மே 29-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மதுரையில் 2 வீடுகளை அபகரித்து உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்குதெருவை சேர்ந்தவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் என்ற வடிவேல் (வயது 61). இவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய பிரஜையாக உள்ளேன். மதுரை வளர் நகர் பகுதியில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.இங்கு எனது பெயரில் வாங்கிய இடத்தில் 2 வீடுகள் கட்டி வந்தேன்.

    இதற்காக சிறுகூடல் பட்டியை சேர்ந்த நாச்சியப்பன் என்பவரை உதவியாளராக நியமித்து அவரது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் வரை வீடுகள் கட்டுவதற்காக அனுப்பியதுடன், அவருக்கும் மாதம்தோறும் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தேன்.

    இந்த நிலையில் அவசர வேலை காரணமாக வெளிநாடு சென்ற நான் அந்த வீட்டுகளுக்குரிய சாவியை நாச்சியப்பனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன். இங்கு வந்து பார்த்தபோது நாச்சியப்பனும், அவரது மனைவி அருள் சசிகலாவும் என்னுடைய அனுமதியில்லாமல் 2 வீடுகளையும் அபகரித்து க்கொண்டதுடன் அதில் அத்துமீறி நுழைந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கேட்ட போது ஆபாசமாக பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் நாச்சியப்பன், அவரது மனைவி அருள் சசிகலா ஆகியோர் மீது மாட்டு தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×