என் மலர்
நீங்கள் தேடியது "மனோகர்லால் கட்டார்"
- கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.
- மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.
தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் பதில் அளித்துள்ளார்.
* தமிழக அரசின் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டது.
* மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்லை.
* தமிழக அரசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம் மற்றும் வேகம் மக்களை கோவை மெட்ரோ ரெயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை.
* கோவை புறநகர் மக்கள் மெட்ரோ ரெயில் திட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதை திட்ட அறிக்கையில் சரியாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை.
* கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.
* சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அரசு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கியதை முதலமைச்சர் மறைத்துவிட்டார்.
* மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அரியானா மாநிலம் முதல்வர் மனோகர்லால் கட்டார் இன்று இஸ்ரேல் விமான தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டார். அங்கு விமானம் மற்றும் பாதுகாப்புத்துறையில் அந்நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய கண்டுபிடிப்புகளை இஸ்ரேல் அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினார்கள்.
இஸ்ரேல் விமான தயாரிப்பு நிறுவனம் இந்தியாவுடன் 1 பில்லியன் டாலர் மதிப்பில் செய்துள்ள ஒப்பந்தத்தை குறிப்பிட்டு பேசிய அதிகாரிகள், அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் துணை விமான தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ விரும்புவதாக விருப்பம் தெரிவித்னர்.
இதையடுத்து, அடுத்த மாதம் ஹிசார் பகுதியை பார்வையிட வருமாறு அவர்களுக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இணையதள சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் உயர் தொழில்நுட்ப செயல்முறைகளையும் அதிகாரிகள் கட்டாரிடம் விளக்கினார்கள். துணை விமான உற்பத்தி தொழிற்சாலை நிறுவனம் மட்டுமல்லாமல் இணைய பாதுகாப்பு நிறுவனங்களிடமும் அரியானாவில் நிறுவனங்களை தொடங்க கட்டார் அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliAerospaceIndustry #ManoharLal






