என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி அரசு பள்ளி"
- டெல்லியில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
- சிஎன்ஜி பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகளால் மாற்றப்படும்.
டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு, ஏப்ரல் 1ம் தேதி முதல் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படாது என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
காற்று மாசை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் வெளியிட்டார்.
டெல்லியில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு, தனது வாக்குறுதிகளில் மாசற்ற டெல்லியை உருவாக்குவோம் என்று தெரிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக, இனி டெல்லியில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும் டிசம்பர் 2025-க்குள் டெல்லியில் உள்ள 90 சதவீத பொது சிஎன்ஜி பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகளால் மாற்றப்படும் என்றும் கூறினார்.
டெல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லியன் நரேலா பகுதியில் அரசுப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் இன்று மதியம் மாணவர்களுக்கு வழக்கம்போல் உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக வயிற்று வலியால் துடித்தனர்.
இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மூத்த டாக்டர் தெரிவித்தார். உணவில் ஏதாவது விஷ பூச்சி விழுந்திருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சனிக்கிழமை டெல்லி கிச்ரிபூரில் உள்ள அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 2 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். #DelhiMiddayMeal
டெல்லியன் நரேலா பகுதியில் அரசுப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் இன்று மதியம் மாணவர்களுக்கு வழக்கம்போல் உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக வயிற்று வலியால் துடித்தனர்.
இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மூத்த டாக்டர் தெரிவித்தார். உணவில் ஏதாவது விஷ பூச்சி விழுந்திருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த சனிக்கிழமை டெல்லி கிச்ரிபூரில் உள்ள அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 2 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். #DelhiMiddayMeal
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான தனிப் பாடத்திட்டதை ஏற்படுத்தியுள்ளது. #HappinessCurriculum #Kejriwal
புதுடெல்லி:
டெல்லி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான தனிப் பாடத்திட்டதை ஏற்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தீர்மானித்தது.
இதை தொடர்ந்து இந்த பாடத்திட்டத்துக்கான பாடங்களை உருவாக்குவதில் கல்வியாளர்கள் குழு இறங்கியது. இந்த குழுவின் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட மகிழ்ச்சிக்கான (Happiness Curriculum)
புதிய பாடத்திட்டத்தை திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லி தியாகராஜ் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளையர் ஆட்சிக்காலத்து 150 ஆண்டுகால பழைமைவாய்ந்த பாடத்திட்டத்துக்கு மாற்றாக தற்கால சூழலுக்கு ஏற்ப இந்த புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டுப்பற்று மற்றும் தியானத்துடன் கூடிய பாடங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய பாடத்திட்டம் நாள்தோறும் அனைத்து வகுப்புகளிலும் 45 நிமிடங்கள் நடைபெறும். இதை தொடங்கி வைக்க தலாய் லாமாதான் சிறந்தவர் என நாங்கள் தேர்வு செய்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.
முழுமையான அறிவு, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் வெளியுலகுக்கு சென்று சகோதரத்துவம், ஒருமைப்பாடு, அமைதி ஆகிய அறவழிகளின் மூலம் புதிய சமுதாயத்தை கட்டமைப்பார்கள் என டெல்லி கல்வித்துறை மந்திரி மற்றும் துணை முதல் மந்திரியுமான மணிஷ் சிசோடியா கூறினார். #HappinessCurriculum #Kejriwal






