என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வையற்றோர் கிரிக்கெட்"

    • இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன.
    • இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.

    புதுடெல்லி:

    இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை முதல் சீசன் நடைபெற்றது.

    இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.

    இந்நிலையில், பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்த அவர், கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு சாதனை, கடின உழைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு. அணியின் எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

    இலங்கைக்கு எதிரான பார்வையற்றோர் டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. #T20BlindCricket #INDvSL
    புதுடெல்லி:

    இலங்கை மற்றும் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில் மூன்றாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. அஜய் அரை சதம் அடித்தார்.

    இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, விரைவிலேயே முன்னணி விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் நிதானமாக ஆடினர். இதனால் ரன்ரேட் உயரவில்லை. சிறப்பாக விளையாடிய அஜித் சில்வா அரை சதம் அடித்தார். எனினும் அந்த அணியால் 189 ரன்களே சேர்க்க முடிந்தது. இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஜய் ரெட்டி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இதனால் தொடரையும் கைப்பற்றி உள்ளது. 4-வது போட்டி லூதியானாவில வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. #T20BlindCricket #INDvSL
    இந்தியாவுக்கு இரு உலக கோப்பைகளை வென்றுதந்த பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கர்நாடக அரசு வேலை வழங்க வேண்டும் என இந்த அணியின் முன்னாள் கேப்டன் வலியுறுத்தியுள்ளார். #governmentjob #Blindcricketers #ShekharNaik
    பெங்களூரு:

    பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சேகர் நாயக் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பார்வையற்றோருக்கான கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்றை அமைக்கப் போவதாக குறிப்பிட்ட அவர், பலமுறை தனக்கு அரசு வேலை வழங்கப்படாததால் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

    தனது தலைமையில் பார்வையற்றோருக்கான 20-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாட்டுக்கு இரண்டு முறை உலக கோப்பைகளை பெற்று தந்தும் இந்த அணியின் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

    உலக நாடுகளில் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கேரளாவில் இவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடக மாநில அரசும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். #governmentjob #Blindcricketers #ShekharNaik
    ×