என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்ப்பாக்கம் மருத்துவமனை"

    • சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
    • மின் தடையை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் இன்று சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த மின் ஊழியர்கள் மின் தடையை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கட்டுமான பணியின்போது மின் வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    தொடர் மின் தடையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் ஏற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை பெண்ணுக்கும் எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #HIVBlood
    பூந்தமல்லி:

    மாங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் கீரை வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் வியாபாரியின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

    4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

    இதையடுத்து அந்த பெண் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் 2 யுனிட் ரத்தம் ஏற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியிலேயே மாதம் தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வந்திருக்கிறார்.



    8-வது மாதம் மருத்துவ பரிசோதனை செய்த போது எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

    9-வது மாதம் நிறைவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி குழந்தை பெற்று இருக்கிறார்.

    எச்.ஐ.வி. பாதிப்பால் மனம் உடைந்த அந்த பெண் தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் எச்.ஐ.வி. இருந்ததாக தெரிவித்து சுகாதார துறைக்கு கருணை மனு அனுப்பி இருக்கிறார்.

    ஆனால் அது பற்றி யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக வெளியே சொல்ல பயந்து இருந்த அந்த பெண் சாத்தூர் சம்பவத்தை தொடர்ந்து தனக்கும் அந்த மாதிரி கொடுமை நிகழ்ந்தது என்று இன்று கண்ணீருடன் தெரிவித்தார்.

    இந்த புகார் குறித்து எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு தலைவர் செந்தில்ராஜிடம் கேட்ட போது, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீனிடம் இதைப்பற்றி விசாரித்தேன். அவர் தவறான தகவல் என்று தெரிவித்தார் என்று கூறினார். #HIVBlood
    ×