search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SIMI"

    • கடந்த 2001-ல் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பு முதன்முதலாக தடை செய்யப்பட்டது.
    • அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 2001-ல் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பு முதன்முதலில் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும் சிமி அமைப்பின் மீது 5 ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதிலும் ஈடுபட்டதற்காக சிமி அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

    இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது. பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதிலும், பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களிலும் சிமி அமைப்பு ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிமி மீது விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.
    • மற்ற நாடுகளில் உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    "சிமி" இயக்கத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி சிமி அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

    இந்த தடை உத்தரவை எதிர்த்து அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஹூமாம் அகமது சித்திக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.

    இதற்கிடையே இம்மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு, பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    சிமி இயக்கம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி முதல் தடை செய்யப்பட்டிருந்தாலும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து, சந்தித்து சதி செய்வது, ஆயுதங்கள், வெடிமருந்துகளை பெறுகிறார்கள் என்பது தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மற்ற நாடுகளில் உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் நாட்டில் அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அவர்கள் கூறும் நோக்கங்கள் இந்தியாவின் சட்டங்களுக்கு முரணானவை. எனவே சிமி இயக்கத்தை செயல்பட அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரளாவில் சிமி இயக்கம் நடத்திய பயிற்சி முகாம் தொடர்பான வழக்கில் 18 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    நாட்டிற்கு எதிராக சிமி என்ற இயக்கம் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா, மத்திய பிரேதசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சி முகாம்களை நடத்தியது. இதைதொடர்ந்து, கேரளா மாநிலம் கோட்டயம் என்ற பகுதியிலும் சிமி இயக்கம் ரகசிய முகாம் நடத்தியது.

    இந்த முகாமில்,  ஆயுத பயிற்சி, வெடி குண்டு தயாரித்தல், கயிறு ஏறும் பயிற்சி, மோட்டார் சைக்கிள் ரேஸ் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தது.
     
    இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றம்சாடப்பட்ட 35 பேர்களில், 18 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். 17 பேரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

    இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. 18 குற்றவாளிகளுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #WagamonSIMIcampcase #KochiSpecialNIAcourt
    ×