என் மலர்
நீங்கள் தேடியது "Shambhu Border"
- டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய முடியாத வகையில் எல்லையை பிளாக் செய்தது அரியானா.
- போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருப்பதால் தடையை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு.
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு டிராக்டரில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அரியானா மாநில அரசு டெல்லி, பஞ்சாப், அரியானா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஷம்பு எல்லையில் தடுப்புகளை அமைத்தது. கான்கிரீட் அமைத்தும், பெரிய பெரிய ஆணிகளை சாலைகளிலும் பதித்தும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முடியாத வகையில் சாலையை பிளாக் செய்தது. இதனால் விவசாயிகள் ஷம்பு எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தற்போதும் குறைந்த அளவிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே ஷம்பு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த அரியானா மாநிலத்திற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அரியானா மாநிலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநில அரசு எப்படி தேசிய நெடுஞ்சாலையை பிளாக் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர்.
மேலும், "போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது மாநில அரசின் பணியாகும். எல்லயை திறந்து வையுங்கள். அதை கட்டுப்படுத்துங்கள் என நாங்கள் சொல்கிறோம்" எனத் தெரிவித்தனர்.
அத்துடன் அரியானா மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், நீங்கள் சாலை வழியாக பயணம் செய்வீர்கள் என நினைக்கிறேன் என நீதிபதி சூர்ய காந்த் கேட்டார். அப்போது வழக்கறிஞர் ஆமாம் என்றார்.
அப்போது நீதிபதி, "நீங்களும் சிரமங்களை எதிர்கொண்டிருக்க வேண்டும்" என்றார்.
- இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மனுவை விசாரிக்கிறது.
- பொது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
சம்பு எல்லையில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் டெல்லி நோக்கிய பேரணியை ஒத்திவைத்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜால் புயன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்ய இருக்கிறது.
பொதுநல வழக்கு தொடர்பான மனுவில் சம்பு எல்லை உள்பட அனைத்து நெடுஞ்சாலைகளையும் திறக்க மத்திய, பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், நெடுஞ்சாலையை மறிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோடு தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் மற்றும் இந்திய நீதிச் சட்டத்தின் கீழ் குற்ற செயல் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், நெடுஞ்சாலையை மறிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டம் நடத்தும் விவசாயிகளை நெடுஞ்சாலையில் இருந்து அகற்ற மத்திய, பஞ்சாப், ஹரியானா அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் மனுவில் கோரப்பட்டுள்ளது.
- இன்று காலை 6 மணி முதல் வருகிற 17-ந் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது
- பாகிஸ்தான் எல்லையை போல ஷம்பு எல்லை நடத்தப்படுகிறது
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டிசம்பர் 6 ஆம் தேதி முதல் டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடந்த முயன்றனர்.
விவசாயிகள் குவிவதை தடுக்கும் வகையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் வருகிற 17-ந் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகலில் 101 விவசாயிகள் அடங்கிய குழு டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய நிலையில் [ஹரியானா-பஞ்சாப்] ஷம்பு எல்லையில் அவர்கள் கூடியபோது அரியானா போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். இதில் 10 விவசாயிகள் வரை காயமடைந்தனர்.
இன்றைய போராட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினரும் மல்யுத்த வீரருமான பஜ்ரங் புனியா, ஷம்பு எல்லையில் விவசாயிகளுடன் இணைந்தார்.
இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர், விவசாயிகளை நாங்கள் தடுக்கவில்லை என்று ஒரு பக்கம் அரசு சொல்லிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் எல்லையை போல ஷம்பு எல்லை நடத்தப்படுகிறது. அரசியல் தலைவர்கள் டெல்லி சென்று போராட்டம் நடத்தும் போது அனுமதி வாங்கிதான் செல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.







