search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "security guards"

    நாடு முழுவதும் உள்ள 25 லட்சம் காவலாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் காவலாளிகளாக மாற வேண்டும் என விரும்புகின்றார் என தெரிவித்தார். #PMModi #Chowkidar
    புதுடெல்லி:

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார். இதற்கு பதிலடியாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

    மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி மாற்றியுள்ளார். (சவுகிதார்) ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும், வாட்ச்மேன்களாக பணியாற்றும் சுமார் 25 லட்சம் காவலாளிகளிடம் ஆடியோ வசதி மூலம் இன்று உரையாற்றினார்.  ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    காவலாளிகள் என்பதற்கான விளக்கத்தை உலகம் முழுவதும் உள்ள பல மொழிகளில் அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் காவலாளிகளாக மாற வேண்டும் என விரும்புகின்றார். ஆனால், தவறான நோக்கத்துடன், காவலாளி என்பது குறித்து சிலர் தவறாக பிரசாரம் செய்கின்றனர். அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களின் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியது எதிர்பாராதது.

    காவலாளிகள் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளனர். அனைத்துக் கொடுமைகளுக்கு எதிராகவும் இந்தியா போராடி வருகிறது. நமது ராணுவம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்என தெரிவித்துள்ளார். #PMModi #Chowkidar
    பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. #cellphoneusebanned #dgpoffice
    சென்னை

    சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி  மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு  பணியில் இருக்கும்போது,  காவலர்கள்  செல்போனை பயன்படுத்துவதால் பணியில் கவனக்குறைவு ஏற்படுகிறது.  அதுப்போல் காவலர்கள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.  வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், டிஜிபி அலுவலகம் ஒவ்வொரு  காவலருக்கும்  சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்போன் பயன்படுத்தலாம் என கூறப்பட்டு உள்ளது. #cellphoneusebanned #dgpoffice 
    ×