search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sea card"

    • மண்டபம் அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் வேதாளை பகுதியில் இருந்து தொடா்ந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் ஆகியோா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் கடல் அட்டை கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து குப்பை என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை நடத்தியபோது சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத் தப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி தோப்பின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
    • இவைகளின் ெமாத்த மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் கடல் அட்டை ஆகியவற்றை கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் கடலோர பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கடத்தலை தடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நேற்று தனுஷ்கோடி பகுதியில் கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 96 கிலோ கஞ்சா பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக மன்சூர் அலிகான் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்திச் செல்ல கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடல் அட்டை கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இதனை தடுக்கும் வகையில் வனத் துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மற்றும் வேதாளை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத் துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

    இந்த நிலையில் மண்டபம் வனத்துறை வனவா் அருண்பிரகாஷ், வேட்டைத்தடுப்பு காவலா்கள் நேரு, கண்ணன், சிவசண்முகம், ராஜேஷ் ஆகியோர் மரைக்காயா்பட்டணம்- வேதாளை சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அந்த வாகனம் வேதாளையை சோ்ந்த முகமது அலி ஜின்னா (வயது47) என்பவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.

    இதையடுத்து காரில் இருந்த முகமது அலி ஜின்னாவின் தம்பி சாதிக்அலியை வனத் துறையினா் கைது செய்ய முயன்றனா். அதற்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க வில்லை. மேலும் அவர் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு கும்பலை அங்கு வரவழைத்தாா். அங்கு வந்த 20 போ் கும்பல் வனத்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்து வாகனத்தை எடுத்துச் சென்றனா்.

    இதுகுறித்து வனவர் அருண்பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் சாதிக்அலி, அவரது அண்ணன் முகமது அலி ஜின்னா மற்றும் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

    தொண்டி அருகே கடல் அட்டை, கடல் பல்லி ஆகியவற்றை கடத்தியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம். தொண்டி கடலோர பகுதியில் வனச்சரகர் சதீஷ் உத்தரவின்படி வனவர் சுதாகர், வனக் காப்பாளர்கள் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர் செல்வராஜ், விஜயபாஸ்கர் ஆகிய வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மணக்குடி அருகே தொண்டி நோக்கி வந்து கொண்டிருந்தவரை சோதனையிட வனச்சரக காவல் படையினர் நிறுத்திய போது நிறுத்தாமல் வேகமாகச் சென்றார்.

    அங்கிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் வரை வனத்துறையினர் சினிமா பாணியில் துரத்தி வந்து தொண்டியில் மடக்கி பிடித்தனர்.

    அவரிடம் விசாரித்த போது தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த சித்திக் மகன் முகம்மதுஅலி (28) என் பது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டை, 5 கிலோ கடல் குதிரை மற்றும் 1 கிலோ கடல் பல்லியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 50 ஆயிரம் ஆகும்.

    கைதான முகமதுஅலியை திருவாடானை நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். நீதிபதி பாலமுருகன் அவரை 15 நாள் சிறையில் வைக்க உத்தரவிட்டார். #tamilnews
    ×