என் மலர்
நீங்கள் தேடியது "Scythe cuts"
- தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி.
- கருப்பசாமிக்கும் அவரது சகோதரிகளுக்குமிடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி. கருப்பசாமிக்கும் அவரது சகோதரிகளுக்குமிடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்தவர்கள் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக கருப்பசாமி தட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ் பெக்டர் முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராசாத்திக்கும், முருகனுக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
- சம்பவத்தன்று ராசாத்தி தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழவடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் குமார் மனைவி ராசாத்தி (வயது43). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகனுக்கும் (50) நிலத்தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வருகிறது.
பெண்ணுக்கு வெட்டு
இந்நிலையில் சம்பவத்தன்று ராசாத்தி ஊருக்கு அருகே உள்ள தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முருகன், அவரது மனைவி ராஜேஷ்வரி (45), மகள் அனிதா (21) ஆகியோர் எங்கள் மீது ஏன் போலீசில் புகார் செய்தாய்? என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், ராஜேஷ்வரி, அனிதா ஆகியோர் ராசாத்தியை தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராசாத்தி களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகன் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.






