என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
    X

    களக்காடு அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

    • ராசாத்திக்கும், முருகனுக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • சம்பவத்தன்று ராசாத்தி தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் குமார் மனைவி ராசாத்தி (வயது43). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகனுக்கும் (50) நிலத்தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வருகிறது.

    பெண்ணுக்கு வெட்டு

    இந்நிலையில் சம்பவத்தன்று ராசாத்தி ஊருக்கு அருகே உள்ள தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த முருகன், அவரது மனைவி ராஜேஷ்வரி (45), மகள் அனிதா (21) ஆகியோர் எங்கள் மீது ஏன் போலீசில் புகார் செய்தாய்? என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், ராஜேஷ்வரி, அனிதா ஆகியோர் ராசாத்தியை தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராசாத்தி களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகன் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.

    Next Story
    ×