search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school student dies"

    • நண்பன் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கவரை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மகன் ஹேமச்சந்திரன் (வயது 9), அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இவனது நண்பரான பிர சன்னாவுடன் (II) சைக்கிளில் காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் செல்லும் போது, எதிரே வந்த சரக்கு வேன் திடீரென அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    இதில் ஹேமச்சந்திரனை பாணாவரம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    மேலும் பிரசன்னா வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்ப வம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை பரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகன். இவரது மகன் சுரேந்தர் (வயது 18) 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நாகனும் அவரது மகன் சுரேந்தரனும் சபரிமலை அய்யப்பன் கோவில் செல்வதற்காக மாலை அணிந்திருந்தனர். அவரது வீட்டில் இன்று கன்னி பூஜை நடக்க இருந்தது.

    இதற்காக ஏடூரில் வசிக்கும் தனது சகோதரியை அழைப்பதற்காக நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மோட்டார் சைக்கிளை சுரேந்தர் ஓட்டிச் சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் அபியும், ஏடூரைச் சேர்ந்த தமிழரசு என்பவரும் உடன் சென்றனர்.

    3 பேர் சென்ற மோட்டார் சைக்கிள் எளாவூரில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த சிமெண்ட் தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவர் சுரேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மற்ற 2 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ள நிலையில் திருவெறும்பூரில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை, கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். எலக்ட்ரீசியன். இவரது மகன் சஞ்சய் (வயது 8). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி சஞ்சய்க்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் குணமாகவில்லை. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சஞ்சய் பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×