search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sakshi Maharaj"

    பாராளுமன்ற தேர்தலில் தனக்கு சீட் தராவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாண்டேவுக்கு பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் கடிதம் எழுதியுள்ளார். #BJP #SakshiMaharaj
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னா தொகுதி பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகாராஜ். இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசக்கூடியவர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் உன்னா தொகுதியில் மீண்டும் போட்டியிட தனக்கு ‘சீட்’ கேட்டு, உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திரநாத் பாண்டேவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், தனக்கு சீட் தராவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாண்டேவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் கூறியுள்ளார்.

    அந்த கடிதத்தில், “உன்னா தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே பிரதிநிதி நான்தான். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக நிறைய பணிகள் செய்துள்ளேன். கட்சி வேறுவிதமான முடிவு எடுத்தால், கோடிக்கணக்கான தொண்டர்கள் அதிர்ச்சி அடைவார்கள். அதனால் தேர்தல் முடிவு சாதகமாக அமையாது” என்று சாக்‌ஷி மகாராஜ் கூறியுள்ளார். #BJP #SakshiMaharaj
    என்னை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன் என சாக்சி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.
    உன்னாவ்:

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்பி சாக்சி மகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் என்னை எதிர்த்து (உன்னாவ் தொகுதியில்) போட்டியிட தயாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன். அவர் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டு விலகுவேன். ஆனால் தோல்வி அடைந்தால் இத்தாலிக்கு செல்ல வேண்டும்.

    ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரையை எதிர்க்கவில்லை. பா.ஜ.க. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஆனால், அதுபோன்ற யாத்திரைக்கு தூய்மை அவசியம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, யாத்திரையை தொடங்கும் முன்வாக அவர் தூய்மையானவராக ஆகியிருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு தரிசனம் செய்வதை நியாயப்படுத்த முடியாது.

    எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படுகின்றன. அதனால்தான் மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். #SakshiMaharaj
    ஷரியத் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என பாஜக எம்.பி சாக்‌ஷி மகாராஜ் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #SakshiMaharaj #Shariat
    லக்னோ:

    தனது சர்ச்சை கருத்துக்களால் மிகவும் பிரசித்தி பெற்ற பா.ஜ.க தலைவர்களுள் ஒருவர் சாக்‌ஷி மகாராஜ். இவர் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ஷரியத் நீதிமன்றங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு தனது வழக்கமான பாணியில் பதிலளித்த சாக்‌ஷி மகாராஜ், ஷரியத் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என கூறியுள்ளார்.

    மேலும், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, மிகவும் பலமானதாக இருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வாழ தகுதி அற்றவர்கள் எனவும், அவர்களை மகிழ்ச்சியுடன் பாகிஸ்தானுக்கு வழியனுப்பி வைக்கிறோம் எனவும் சாக்‌ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். #SakshiMaharaj #Shariat
    ×