என் மலர்
நீங்கள் தேடியது "சாக்ஷி மகாராஜ்"
பாராளுமன்ற தேர்தலில் தனக்கு சீட் தராவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாண்டேவுக்கு பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகாராஜ் கடிதம் எழுதியுள்ளார். #BJP #SakshiMaharaj
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் உன்னா தொகுதி பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகாராஜ். இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசக்கூடியவர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் உன்னா தொகுதியில் மீண்டும் போட்டியிட தனக்கு ‘சீட்’ கேட்டு, உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திரநாத் பாண்டேவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், தனக்கு சீட் தராவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாண்டேவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில், “உன்னா தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே பிரதிநிதி நான்தான். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக நிறைய பணிகள் செய்துள்ளேன். கட்சி வேறுவிதமான முடிவு எடுத்தால், கோடிக்கணக்கான தொண்டர்கள் அதிர்ச்சி அடைவார்கள். அதனால் தேர்தல் முடிவு சாதகமாக அமையாது” என்று சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளார். #BJP #SakshiMaharaj
உத்தரபிரதேச மாநிலம் உன்னா தொகுதி பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகாராஜ். இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசக்கூடியவர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் உன்னா தொகுதியில் மீண்டும் போட்டியிட தனக்கு ‘சீட்’ கேட்டு, உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திரநாத் பாண்டேவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், தனக்கு சீட் தராவிட்டால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாண்டேவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில், “உன்னா தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே பிரதிநிதி நான்தான். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக நிறைய பணிகள் செய்துள்ளேன். கட்சி வேறுவிதமான முடிவு எடுத்தால், கோடிக்கணக்கான தொண்டர்கள் அதிர்ச்சி அடைவார்கள். அதனால் தேர்தல் முடிவு சாதகமாக அமையாது” என்று சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளார். #BJP #SakshiMaharaj
ஷரியத் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #SakshiMaharaj #Shariat
லக்னோ:
தனது சர்ச்சை கருத்துக்களால் மிகவும் பிரசித்தி பெற்ற பா.ஜ.க தலைவர்களுள் ஒருவர் சாக்ஷி மகாராஜ். இவர் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ஷரியத் நீதிமன்றங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தனது வழக்கமான பாணியில் பதிலளித்த சாக்ஷி மகாராஜ், ஷரியத் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என கூறியுள்ளார்.
மேலும், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, மிகவும் பலமானதாக இருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வாழ தகுதி அற்றவர்கள் எனவும், அவர்களை மகிழ்ச்சியுடன் பாகிஸ்தானுக்கு வழியனுப்பி வைக்கிறோம் எனவும் சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். #SakshiMaharaj #Shariat
தனது சர்ச்சை கருத்துக்களால் மிகவும் பிரசித்தி பெற்ற பா.ஜ.க தலைவர்களுள் ஒருவர் சாக்ஷி மகாராஜ். இவர் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ஷரியத் நீதிமன்றங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தனது வழக்கமான பாணியில் பதிலளித்த சாக்ஷி மகாராஜ், ஷரியத் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என கூறியுள்ளார்.
மேலும், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, மிகவும் பலமானதாக இருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வாழ தகுதி அற்றவர்கள் எனவும், அவர்களை மகிழ்ச்சியுடன் பாகிஸ்தானுக்கு வழியனுப்பி வைக்கிறோம் எனவும் சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். #SakshiMaharaj #Shariat






