search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road closures"

    • 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.

    அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலையிலும் கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    சின்ன முட்டம், குளச்சல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அந்த பகுதியில் நங்கூரம் பாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    கடல் அலைகள் 15 அடி முதல் 20 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. ராட்சத அலைகள் கடற்கரையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது வேகமாக மோதி சென்றன. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடல் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொல்லங்கோடு தூத்தூர் இரையுமன் துறை வள்ளவிளை சின்னத்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இன்று காலையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் வேகமாக மோதியது. தூண்டில் வளைவு இல்லாத பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகள் அந்த சாலைகளை இழுத்துச்சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் அடுக்கப்பட்டு இருந்த கற்களையும் அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்றது.

    இந்த சாலையை குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இங்கிருந்து அவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு இந்த சாலை மிகவும் வசதியாக உள்ளது.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை தற்போது துண்டிக்கக்கூடிய சூழலில் உள்ளது. பள்ளி வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பல சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
    • போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், அலுவலகத்திற்கு பலர் தாமதமாக சென்றனர்.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராகவும், ராகுல் காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைநகர் டெல்லியில் காங்கிரசார் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கோல் டக் கானா சந்திப்பு, படேல் சௌக், வின்ட்சர் பிளேஸ், தீன் மூர்த்தி சௌக் மற்றும் பிருத்விராஜ் சாலைகளை போலீசார் மூடினர். பேருந்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

    மேலும் கோல் மேத்தி சந்திப்பு, துக்ளக் சாலை சந்திப்பு, கிளாரிட்ஜஸ் சந்திப்பு, கியூ-பாயின்ட் சந்திப்பு, சுனேஹ்ரி மசூதி சந்திப்பு, மௌலானா ஆசாத் சாலை சந்திப்பு, மான் சிங் சாலை சந்திப்புகளில் காலை 800 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பயணம் செய்வதை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

    இதனால் டெல்லி-நொய்டா-டெல்லி பறக்கும் பாதை, மீரட் எக்ஸ்பிரஸ்வே, ஆனந்த் விஹார், சராய் காலேகான், பிரகதி மைதானம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதில் சிக்கி தவித்த பயணிகள் தங்களது துயரங்களை சமூக வளைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், அலுவலகத்திற்குத் தாமதமாக சென்றதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

    ×