என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refugee deaths"

    • கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
    • படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர்.

    மியான்மர் நாட்டில் இருந்து ஏராளமான ரோஹிங்கியர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் மலேசியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்பலில் மியான்மரில் இருந்து புறப்பட்டனர்.

    தாய்லாந்து- மலேசியா எல்லைக்கு அருகில் அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி 3 படகுகளில் மலேசியா புறப்பட்டனர். மலேசியா அருகே கடல் பகுதி எல்லையான லங்காவியில் சென்றபோது திடீரென ஒரு படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் கடலில் மூழ்கினார்கள்.

    இதுபற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.

    பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மலேசியா கடல் சார் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்ற 2 படகுகளும் எங்கு சென்றது என தெரியவில்லை.

    இத்தாலியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளி பேருந்தை டிரைவரே கடத்தி தீ வைத்ததில் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். #SchoolBusHijacked #RefugeeDeaths #Italy
    ரோம்:

    இத்தாலியின் மிலன் நகரில் நேற்று 51 மாணவர்களுடன் பள்ளிப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. மாகாண சாலையில் சென்றபோது, பேருந்தின் டிரைவர் திடீரென மாணவர்களை நோக்கி கத்தியுள்ளார். ‘எல்லாவற்றுக்கும் இன்று முடிவு கட்ட விரும்புகிறேன். மத்திய தரைக்கடல் பகுதியில் நடக்கும் அகதிகள் மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறிய அவர், பேருந்தினுள் சிறிது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார்.

    இதனால் மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். ஒரு மாணவன் தனது தந்தையிடம், பேருந்து கடத்தப்பட்ட விவரத்தை கூற, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த பேருந்தை துரத்திச் சென்று மடக்கினர். பின்னர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த மாணவர்களை மீட்டனர். மாணவர்களை மீட்ட சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் எரிந்து கரிக்கட்டையானது. ஒரு காரும் தீயில் கருகியது.



    மீட்கப்பட்ட மாணவர்களில் 12 மாணவர்கள் மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பேருந்தை கடத்தி மாணவர்களை கொல்ல முயன்ற 47 வயது நிரம்பிய டிரைவரையும் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செனகல் நாட்டை பூர்வீகமாக கொண்ட இத்தாலியர் என்பது தெரியவந்தது. மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் மரணம் அடைவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இத்தாலிய உள்துறை மந்திரி மற்றும் துணை பிரதமரின் கடுமையான அகதிகள் விரோத கொள்கைகளை கண்டிக்கும் வகையிலும் பேருந்தை கடத்தி தீ வைத்ததாக அவர் கூறியுள்ளார். அவர் மீது கடத்தல், கொலை முயற்சி, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட நபர், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பாலியல் தொந்தரவு போன்ற குற்றச்செயல்களில் தண்டிக்கப்பட்டு விடுதலையானவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் எப்படி பள்ளி பேருந்தை ஒப்படைத்தார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    உள்நாட்டுப் போர், வறுமை, வன்முறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பலர் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக, சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களின் உதவியுடன் மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான வகையில் படகில் பயணம் மேற்கொள்ளும்போது படகு மூழ்கி ஏராளமான அகதிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #SchoolBusHijacked #RefugeeDeaths #Italy
    ×