search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajasthan Congress Crisis"

    • சச்சின் பைலட்டை முதலமைச்சராக தேர்வு செய்ய, கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு.
    • மேலிட பார்வையாளர்களின் அறிக்கை அடிப்படையில் சோனியா காந்தி நடவடிக்கை

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் நிலையில் இதில் போட்டியிட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார். இதனால் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரசில் கடும் கருத்து மோதல் நிலவு வருகிறது.

    ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு கெலாட் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

    மேலும் கட்சி தலைமை சார்பில் கூட்டப்பட்ட ஆலோசனை கூட்டத்தையும் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் எழுத்துப் பூர்வ அறிக்கை தயார் செய்து கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் கொடுத்தனர்.


    அதன் அடிப்படையில் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் சாந்தி தரிவால், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகிய மூன்று பேரிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. குற்றச்சாட்டுகள் மற்றும் ஒழுக்கமின்மை செயல்களை அடுத்து, அரசியலமைப்பின் விதிகளின்படி உங்கள் மீது ஏன் ஒழுக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்கக் கோரி நோட்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அனுப்பிய நோட்டீஸ் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த கெலாட் ஆதரவாளர் மகேஷ் ஜோஷி, அது கிடைத்ததும், திருப்திகரமான பதில் வழங்கப்படும் என்றார். நாங்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் விசுவாசிகள். உண்மை மற்றும் நீதிக்காக போராடினோம், மேலும் போராடுவோம், கட்சியின் நலனுக்காக நாங்கள் நினைப்பதை செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ராஜஸ்தானில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார்.
    • இதன் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பது சோனியா காந்திக்கு அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் போட்டியிடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியான ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

    இதேபோல காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு கேட்டு போர்க்கொடி தூக்கியவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி.யும் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கட்சி கொள்கை அடிப்படையில் அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதையடுத்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.

    இதுதொடர்பாக கருத்துக்களை கேட்பதற்காக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் சச்சின் பைலட் முதல்-மந்திரி ஆவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 82 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததோடு, சச்சின் பைலட்டை முதல்-மந்திரியாக்க கூடாது என வலியுறுத்தி தங்கள் பதவியை ராஜினாமா செய்ய போவதாக கூறி ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு பிறகே புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய வேண்டும், பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரையும் முதல்வராக்க கூடாது, மேலிட பார்வையாளர்கள் தனித்தனியாக இல்லாமல் எம்.எல்.ஏ.க்களிடம் குழுவாக கருத்து கேட்க வேண்டும் என்ற 3 நிபந்தனைகளையும் அவர்கள் விதித்தனர்.

    கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ.க்களின் இந்த செயலுக்கு பின்னணியில் அசோக் கெலாட் இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

    கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக கெலாட் ஆதரவு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செயல்படுவதும், கட்சி தலைமைக்கு நிபந்தனை விதிப்பதும் தவறு என மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் கூறினார்.

    மேலும் தலைமை கூட்டிய கூட்டத்தில் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தது ஒழுக்கமற்ற நடவடிக்கை என மல்லிகார்ஜூன கார்கேவும், அஜய் மக்கானும் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ராஜஸ்தான் மாநில அரசியல் குழப்பத்திற்கு நான் காரணம் இல்லை எனவும், எம்.எல்.ஏ.க்கள் எனது பேச்சை கேட்கவில்லை எனவும் மேலிட பார்வையாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு அறிக்கை தயார் செய்து கட்சி தலைமையிடம் கொடுத்தனர்.

    புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ராஜஸ்தானில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் இதன் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பது சோனியா காந்திக்கு அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்யுமாறு அசோக் கெலாட்டிடம் வலியுறுத்தி கமல் நாத்தை சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரம் அசோக் கெலாட்டிற்கு பதிலாக வேறு சிலரின் பெயரை காங்கிரஸ் தலைமை பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அந்த வகையில் மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், கமல்நாத், குமாரி செல்ஜா, பவண்குமார் பன்சால் ஆகிய மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் பவண்குமார் பன்சால் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை வாங்கி சென்றுள்ளார். இதனால் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே ராஜஸ்தானில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக சோனியா காந்தி நேற்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து இன்றும் ஆலோசனை நடந்து வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு
    • அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இதையடுத்து முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

    2020-ம் ஆண்டு அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக் கூடாது என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பைலட் போர்க்கொடி தூக்கியபோது கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இதற்கிடையே, 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று இரவில் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையை உணர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட்டை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி இருக்கிறார். ஆனால் அசோக் கெலாட், தன் கையில் எதுவும் இல்லை என்றும், எம்எல்ஏக்கள் தன் மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

    இது ஒருபுறமிருக்க, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்திருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் கூட்டத்தை நடத்துவதற்காக காத்திருந்தனர். சச்சின் பைல்ட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்றனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வராததால் கூட்டம் நடைபெறவில்லை. இதன்மூலம் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

    ×