search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price decrease"

    • விதை வெங்காயத்திற்காக பழைய இருப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்ததால் விலை உச்சத்தில் இருந்தது.
    • அறுவடைக்கு முன் உச்சபட்ச விலைக்கு விற்பனையானதால் ஓரளவு விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

    தாராபுரம் : 

    கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அதிகமான பனிப்பொழிவின் காரணமாக உள்ளூர் விவசாயிகள் தாமதமாக நடவு செய்ததால் திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் அறுவடை துவங்கவில்லை. துறையூர், குருவாரெட்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது.

    கடந்த மாதம் கிலோ 100 ரூபாய்க்கு சில்லறை விலையில் விற்பனையானது. விவசாயிகளிடம் 90 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது. பல விவசாயிகள் விதை வெங்காயத்திற்காக பழைய இருப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்ததால் விலை உச்சத்தில் இருந்தது.

    கடந்த வாரம் தான் அறுவடை துவங்கியது. புதிய வெங்காயம் சந்தைக்கு வர துவங்கியவுடன் அதிகபட்ச சில்லறை விலை கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது கிலோ 40 ரூபாய்க்கு ரோட்டோர கடைகளில் கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்தாண்டு அபரிமிதமான விளைச்சல் காரணமாக வெங்காயம் கேட்பார் இல்லாமல் இருந்தது. இதனால் ஏராளமான விவசாயிகள் உழவு ஓட்டி அழித்தனர். இதில் வெங்காய விவசாயிகள் பலரும் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த ஆண்டு அறுவடைக்கு முன் உச்சபட்ச விலைக்கு விற்பனையானதால் ஓரளவு விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், உள்ளூர் அறுவடை துவங்கும் முன்பே விலை வீழ்ச்சி அடைந்துள்ளது வெங்காய விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சில்லறை விலையில் 40 ரூபாய்க்கு விற்றால் விவசாயிகளிடம் கிலோ 30 ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்வர். சீசன் களை கட்டும் பொழுது வரத்து அதிகரிக்கும். கொள்முதல் விலை 30 ரூபாய்க்கும் கீழ் சரிந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம், சின்னமருதூர், பெரிய மருதூர் , அய்யம்பாளையம், தண்ணீர் பந்தல், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, அரளி, செவ்வந்தி காக்கட்டான், சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து வியாபாரிகள் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர். வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டுமல்லிகை கிலோ ரூ.3000- க்கும், காக்கட்டான் ரூ. 1300-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.300- க்கும், ரோஜா கிலோ ரூ.250- க்கும், முல்லைப் பூ ரூ.2000- க்கும், செவ்வந்திப்பூ ரூ.250- க்கும், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று குண்டு மல்லிகை கிலோ ரூ.1300-க்கும், சம்பங்கி கிலோ ரூ100- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.180- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும்,செவ்வந்திப்பூ ரூ.120- க்கும், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தொடர் மலையின் காரணமாகவும் வரத்து அதிகரிப்பாலும் பூக்களின் விலை குறைந்துள்ளது.

    • பரமத்திவேலூர் பகுதிகளில் உற்பத்தி அதிகரிப்பால் வாழைத்தாரின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    • மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும் மொந்தன் காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது.

    சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும் , மொந்தன் காய் ஒன்று ரூ.6- க்கும் விற்பனையானது.

    தற்போது விசேஷ நிகழ்ச்சிகள் அதிகமாக எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இன்று பெட்ரோல் விலை 42 காசுகளாகவும், டீசல் விலை 32 காசுகளாகவும் குறைந்தது.
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

    கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தினம், தினம் உயர்த்தப்பட்டது.

    இந்த மாத தொடக்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83-ஐ கடந்தது. பெட்ரோல், டீசல் விற்பனை மீது மத்திய, மாநில அரசுகள் வரியை குறைத்தால், அவற்றின் விலை குறைந்து விடும் என்ற கோரிக்கை விடப்பட்டது.

    ஆனால் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரியை விலக்க மறுத்த விட்டன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பெட் ரோல், டீசல் விலை கடந்த வாரம் முதல் குறையத் தொடங்கியது. நேற்று பெட்ரோல் விலை 21 காசும், டீசல் விலை 15 காசும் குறைந்தது.

    இன்றும் (சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இன்று பெட்ரோல் விலை வட மாநிலங்களில் 40 பைசாவும், டீசல் விலை 30 காசும் குறைந்தது.

    மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பு மாறுபடுவதால் தமிழ்நாட்டில் இன்று பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்தது. டீசல் விலையில் 32 காசுகள் குறைந்தது. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.95 ஆக இருந்தது.

    டீசல் விலை லிட்டர் ரூ.72.08 ஆக உள்ளது. இந்திய எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சில காசுகள் வித்தியாசத்தில் தங்களுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்கின்றன.

    இதனால் பெட்ரோல், டீசல் விலைகள் ஒவ்வொரு பங்கிற்கும் ஒவ்வொரு விதமாக உள்ளன. இந்திய எண்ணை நிறுவனங்கள் இன்று 11-வது நாளாக விலையை குறைத்துள்ளதால் இதுவரை லிட்டருக்கு ரூ.3 வரை குறைந்துள்ளது.

    பெட்ரோல் விலை சில தினங்களுக்கு பிறகு மீண்டும் 80 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. #Petrol #Diesel
    ×