search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூரில் பூக்களின் விலை வீழ்ச்சி
    X

    பரமத்தி வேலூரில் பூக்களின் விலை வீழ்ச்சி

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம், சின்னமருதூர், பெரிய மருதூர் , அய்யம்பாளையம், தண்ணீர் பந்தல், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, அரளி, செவ்வந்தி காக்கட்டான், சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து வியாபாரிகள் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர். வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டுமல்லிகை கிலோ ரூ.3000- க்கும், காக்கட்டான் ரூ. 1300-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.300- க்கும், ரோஜா கிலோ ரூ.250- க்கும், முல்லைப் பூ ரூ.2000- க்கும், செவ்வந்திப்பூ ரூ.250- க்கும், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று குண்டு மல்லிகை கிலோ ரூ.1300-க்கும், சம்பங்கி கிலோ ரூ100- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.180- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும்,செவ்வந்திப்பூ ரூ.120- க்கும், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தொடர் மலையின் காரணமாகவும் வரத்து அதிகரிப்பாலும் பூக்களின் விலை குறைந்துள்ளது.

    Next Story
    ×