என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Modi Condoles"

    • போப் பிரசான்சிஸ் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்லக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.

    சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

    ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.

    அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன். மேலும் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்.

    இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    போப் பிரான்சிஸ் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கருணை, நீதி மற்றும் அமைதியின் உலகளாவிய குரலான புனித போப் பிரான்சிஸின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

    அவர் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுடன் நின்றார். சமத்துவமின்மைக்கு எதிராக அச்சமின்றிப் பேசினார், அன்பு மற்றும் மனிதநேயம் பற்றிய தனது செய்தியால் மில்லியன் கணக்கான மதங்களை ஊக்கப்படுத்தினார்.

    இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்துடன் எனது எண்ணங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.
    • மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் (82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.

    இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார் மருத்துவர் கே.எம்.செரியன்.

    சென்னை பெரம்பூரிலுள்ள ரெயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார். மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறுகையில், "நமது நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவால் துயரமடைந்தேன்.

    இதய மருத்துவத்தில் மருத்துவர் கே.எம்.செரியனின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது" என்றார்.

    இந்தோனேசியாவில் சுனாமி தாக்கி 222 பேர் உயிரிழந்ததற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி அங்கு நிவாரண பணிகளில் உதவிட இந்தியா தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். #PMModi #Modicondoles #Indonesiatsunami
    புதுடெல்லி:

    மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது.
     
    அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பீதியடைந்தனர்.

    இதற்கிடையே, சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின.

    இன்று மாலை நிலவரப்படி அங்கு பலியானோர் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த உயிரிழப்புகளை அறிந்து துயரம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    மரணம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், நமது நட்பு நாடான இந்தோனேசியாவுக்கு நிவாரணப் பணிகளில் உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் உறுதியளித்துள்ளார். #PMModi #Modicondoles #Indonesiatsunami
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேகாலயா மாநில முன்னாள் கவர்னருமான எம்.எம்.ஜேக்கப் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேகாலயா மாநில முன்னாள் கவர்னராகவும் இருந்தவர் எம்.எம்.ஜேக்கப் (வயது90).

    கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த பாலாவைச் சேர்ந்தவர் எம்.எம். ஜேக்கப். வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். பாலாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எம்.எம்.ஜேக்கப் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இவரது இறுதி சடங்கு இன்று பிற்பகல் நடக்கிறது. எம்.எம்.ஜேக்கப்பின் சொந்த ஊரான பாலா, ராமபுரத்தில் உள்ள புனித அகஸ்டின் ஆலயத்தில் நடக்கும் திருப்பலிக்கு பிறகு உடல் அடக்கம் நடைபெறுகிறது.

    எம்.எம்.ஜேக்கப் 1928-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி பிறந்தார். பள்ளி படிப்பை கேரளாவிலும், கல்லூரி படிப்பை சென்னை லயோலா கல்லூரி மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்திலும் படித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்த எம்.எம்.ஜேக்கப் மாநில மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

    டெல்லி மேல் சபை துணைத்தலைவராகவும் இருந்தார். அதன் பிறகு மேகாலயா மாநில கவர்னராக 2 முறை பதவி வகித்தார்.


    எம்.எம்.ஜேக்கப் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநில வளர்ச்சிக்கு சிறந்த சேவை ஆற்றியவர் எம்.எம்.ஜேக்கப். மிகச்சிறந்த பாராளுமன்றவாதியாகவும் திகழ்ந்தார். அதோடு மத்திய மந்திரி பொறுப்பிலும், கவர்னராகவும் சிறப்பாக செயல்பட்டவர். அவரது மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    இது போல காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சி தலைவர்களும் எம்.எம். ஜேக்கப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இறந்து போன எம்.எம். ஜேக்கப்பின் மனைவி அச்சம்மாள். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். #MMJacob
    ×