search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic surgery"

    • தங்களுக்கு புது வாழ்க்கை கிடைத்துள்ளதாக கவுதம், குப்தா இருவரும் கூறினர்
    • நுட்பமான இந்த அறுவை சிகிச்சைகள் இந்திய மருத்துவ சாதனையாகும்

    அரியானா மாநில ஃபரிதாபாத் நகரில் உள்ளது அம்ரிதா மருத்துவமனை (Amrita Hospital).

    10 வருடங்களுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் டெல்லியை சேர்ந்த 65 வயதான கவுதம் டயால் (Gautam Tayal).

    இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தொழிற்சாலை விபத்தில் கவுதம் இடது கரத்தை இழந்தார்.

    சிகிச்சைக்காக அம்ரிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கவுதமிற்கு, தானே (Thane) நகரில் தலையில் காயம் பட்டு "மூளைச் சாவு" அடைந்த 40 வயதான ஒருவரின் கையை மருத்துவர்கள் பொருத்தினர்.

    வட இந்தியாவில் நடந்த முதல் "கை மாற்று" அறுவை சிகிச்சை இதுதான்.

    அது மட்டுமின்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவருக்கு கை மாற்று சிகிச்சை நடைபெறுவதும் இதுதான் நாட்டிலேயே முதல்முறை.

    மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். மோஹித் ஷர்மா (Dr. Mohit Sharma), "இது ஒரு அரிய சாதனை. அவரது கர அசைவுகள் படிப்படியாக செயல்பட தொடங்கி விட்டது. ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என தெரிவித்தார்.

    அறுவை சிகிச்சை முடிவடைந்து கவுதம் சீராக உடல்நலம் தேறி வருகிறார்.

    டெல்லியை சேர்ந்த 19 வயது இளைஞர் தேவான்ஷ் குப்தா (Devansh Gupta).

    3 வருடங்களுக்கு முன் குப்தா ஒரு ரெயில் விபத்தில் இரு கரங்களையும், வலது காலையும் இழந்தார்.

    மூளைச்சாவு அடைந்த சூரத் நகரை சேர்ந்த ஒரு 33 வயது நபரிடமிருந்து இரு கரங்கள், உறுப்பு தானத்தில் பெறப்பட்டு, குப்தாவிற்கு மருத்துவர்கள் பொருத்தினர்.

    நுட்பமான இந்த அறுவை சிகிச்சை குறித்து உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகர், டாக்டர் அனில் முரார்கா (Dr. Anil Murarka), "குப்தாவின் வலக்கரம், மேல் பகுதி வரை மாற்றி பொருத்தி இணைக்கப்பட்டது. இடக்கரம், முழங்கை வரை பொருத்தி இணைக்கப்பட்டது. இது சிக்கலான அறுவை சிகிச்சை. ஆனால், வெற்றிகரமாக நடந்தது" என தெரிவித்தார்.

    அறுவை சிகிச்சை முடிந்து குப்தா, சீராக உடல்நலம் தேறி வருகிறார்.

    மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ள கவுதம் மற்றும் குப்தா இருவரும், "இந்த மாற்று அறுவை சிகிச்சை எங்கள் வாழ்வில் ஒரு மறுவாய்ப்பையும், புதிய நம்பிக்கைகளையும் அளித்துள்ளது" என தெரிவித்தனர்.

    ஃபரிதாபாத் நகரின் செக்டார் 88 பகுதியில், 130 ஏக்கரில் பல்துறை சிறப்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனைகளில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது அம்ரிதா மருத்துவமனை.

    2600 படுக்கை வசதிகளுடன் அதி நவீன அறுவை சிகிச்சைகளில் அனைத்து உயர் தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட இதனை 2022ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

    • 10 வருடங்களுக்கு முன் மார்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்
    • ஆபத்துக்களை குறித்து குறைந்தளவே தகவல்களை மருத்துவமனை தந்திருக்கிறது

    பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் மெலிஸா கெர் எனும் 31-வயது பெண். இவர் சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    சமீபத்தில் இவருக்கு தனது உடலின் முதுகெலும்பிற்கு கீழே உள்ள பின்புற பகுதிகளில் தசைகள் குறைவாக இருப்பதாக தோன்றியதால், இப்பகுதியை அழகுப்படுத்த மருத்துவ வழிமுறைக்கான தகவல்களை தேடினார்.

    இதற்காக துருக்கி நாட்டில் பிரேசிலியன் பட் லிஃப்ட் (Brazilian butt lift surgery) எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதை தெரிந்து கொண்டார். நுணுக்கமான இம்முறையில் உடலின் சதை மிகுந்த பாகங்களிலிருந்து சதை துணுக்குகள் எடுக்கப்பட்டு, சதை குறைந்த பகுதிகளில் ஊசி மூலம் உட்செலுத்தப்படும். பிறகு சில நாட்கள் மாத்திரை, மருந்து மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ளது மெடிக்கானா கடிக்கோய் மருத்துவமனை (Medicana Kadikoy Hospital). இங்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து அறிந்த கெர், அம்மருத்துவமனையை தொடர்பு கொண்டார். அறுவை சிகிச்சை குறித்து லேசான பதற்றம் அவருக்கு ஏற்பட்டதால், இதற்கு முன்பாக அதே சிகிச்சையை செய்து கொண்டவர்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்க கோரினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அனுப்பவில்லை.

    இருப்பினும், கெர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்ததால், அவர் துருக்கி சென்றார். அங்கு அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை முடிந்ததும், கெர் அம்மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

    இங்கிலாந்தில், இது குறித்த விசாரணையில் அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துக்கள் குறித்து குறைவான தகவல்களே துருக்கி மருத்துவமனையால் தரப்பட்டிருக்கிறது என தெரிய வந்துள்ளது.

    அயல்நாடுகளில் அறுவை சிகிச்சைக்கான வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் இது குறித்து அங்கு சென்று அழகுக்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இங்கிலாந்தின் சுகாதார மந்திரிக்கு கடிதம் எழுதப்போவதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

    • அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
    • உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால் உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்றார்.

    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. மாடல் அழகியான இவர் தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

    இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதற்கிடையே இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

    வாரத்திற்கு 3 முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற் கொண்டார். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால் உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் நடிகை சில்வினா லூனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். சில்வினா லூனா, பிளாஸ் டிக் சர்ஜரிக்காக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ டோக்சி என்பவரை அணுகியுள்ளார்.

    அறுவை சிகிச்சையின் போது சில்வினாவுக்கு அர்ஜென்டினா அரசால் தடை செய்யப்பட்ட மருந்தை செலுத்தியதாகவும் இதனால் அவர் பாதிப்பு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அனிபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

    • ஆசிட் வீசியதில் உடலில் 80 சதவீதம் காயங்கள் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் கவிதாவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சிகிச்சையின் ஒரு பகுதியாக கவிதாவுக்கு உடலில் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா, சிவகுமார் மற்றும் தனது குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    கவிதா மீது கோவை போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டில் நடந்த திருட்டு வழக்கு ஒன்று கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜர் ஆவதற்காக கவிதா கடந்த மாதம் 23-ந் தேதி கோர்ட்டுக்கு வந்தார்.

    கோர்ட்டில் உள்ள அறையில் அவர் அமர்ந்து இருந்தார். அங்கு அவரது கணவர் சிவக்குமாரும் வந்தார். குழந்தைகளையும், தன்னையும் தவிக்க விட்டுச் சென்றது பற்றி கேட்டு அவர் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் கொண்டு இருந்த ஆசிட்டை எடுத்து கவிதாவின் மீது ஊற்றினார். இதில் கவிதாவின் உடல் முழுவதும் காயம் அடைந்து துடிதுடித்தார். உடனடியாக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆசிட் வீசியதில் உடலில் 80 சதவீதம் காயங்கள் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் கவிதாவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மெல்ல, மெல்ல அவர் உடல்நிலை தேறி வருகிறார். சிகிச்சையின் ஒரு பகுதியாக கவிதாவுக்கு உடலில் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில் கவிதாவிற்கு உடலில் பல இடங்களில் ஆசிட் வீச்சு காயங்கள் ஏற்பட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிளாஸ்டிக் சர்ஜரி வசதி உள்ளதால் அவருக்கு உயர்தர சிகிச்சை இங்கேயே வழங்கப்பட்டு வருகிறது.

    உடலின் ஒரு பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது. இதில் அவர் நன்கு உடல் நலம் தேறி வருகிறார். அடுத்தக்கட்டமாக அவருக்கு மேலும் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட உள்ளது என்றனர்.

    • ஆசிட் வீசியதில் உடலில் 80 சதவீதம் காயங்கள் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் கவிதாவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சிகிச்சையின் ஒரு பகுதியாக கவிதாவுக்கு உடலில் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா, சிவகுமார் மற்றும் தனது குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    கவிதா மீது கோவை போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டில் நடந்த திருட்டு வழக்கு ஒன்று கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜர் ஆவதற்காக கவிதா கடந்த மாதம் 23-ந் தேதி கோர்ட்டுக்கு வந்தார்.

    கோர்ட்டில் உள்ள அறையில் அவர் அமர்ந்து இருந்தார். அங்கு அவரது கணவர் சிவக்குமாரும் வந்தார். குழந்தைகளையும், தன்னையும் தவிக்க விட்டுச் சென்றது பற்றி கேட்டு அவர் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் கொண்டு இருந்த ஆசிட்டை எடுத்து கவிதாவின் மீது ஊற்றினார். இதில் கவிதாவின் உடல் முழுவதும் காயம் அடைந்து துடிதுடித்தார். உடனடியாக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆசிட் வீசியதில் உடலில் 80 சதவீதம் காயங்கள் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் கவிதாவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மெல்ல, மெல்ல அவர் உடல்நிலை தேறி வருகிறார். சிகிச்சையின் ஒரு பகுதியாக கவிதாவுக்கு உடலில் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில் கவிதாவிற்கு உடலில் பல இடங்களில் ஆசிட் வீச்சு காயங்கள் ஏற்பட்டுள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிளாஸ்டிக் சர்ஜரி வசதி உள்ளதால் அவருக்கு உயர்தர சிகிச்சை இங்கேயே வழங்கப்பட்டு வருகிறது.

    உடலின் ஒரு பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது. இதில் அவர் நன்கு உடல் நலம் தேறி வருகிறார். அடுத்தக்கட்டமாக அவருக்கு மேலும் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட உள்ளது என்றனர்.

    ×