search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "personal secretary"

    • பாலியல் புகார் கூறியுள்ள பெண்ணின் கணவர், காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
    • அரசியல் ரீதியாக பழிவாங்க பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக தனி செயலாளர் தகவல்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலாளராக பணிபுரிந்து வரும் 71 வயதான பி.பி. மாதவன் மீது டெல்லி உத்தம்நகர் போலீஸார், பலாத்காரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும், மாதவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக, டெல்லியில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவர் கூறியுள்ளார்.

    இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் மிரட்டப்பட்டதாகவும், காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து மாதவன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மாதவன், அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையிலும், தனது இமேஜை கொச்சைப்படுத்தும் நோக்கிலும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

    பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் கணவர், காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாகவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


    ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன் சென்னையில் நேற்று காலமானார் #PersonalSecretary #Viswanathan #RIP
    சென்னை:

    ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

    திருச்சி கலெக்டர், சுகாதாரத்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர், கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உள்பட பல உயரிய பதவிகள் வகித்தவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.விஸ்வநாதன். இவர் சென்னை அண்ணாநகர் பொன்னிகாலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    விஸ்வநாதன் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து காரில் வெளியே கிளம்பினார். காரை பின்புறமாக இயக்கும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது பலமாக மோதியது. இதில் அவர் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று மாலை உயிரிழந்தார்.

    அவரது உடல் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் அவரது உடல் நியூ ஆவடி ரோட்டில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    மறைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஸ்வநாதனுக்கு ஆதிரைசெல்வி என்ற மனைவியும், கவுதமன், அசோக்குமார் என்ற 2 மகன்களும், மித்ரா என்ற மகளும் உள்ளனர்.
    ×