search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pensions"

    • தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
    • 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்–சங்கத்தின் தஞ்சை மாவட்ட 13- வது மாநாடு தஞ்சாவூர் கீழராஜ வீதியில் உள்ள மாவட்ட அலுவலகம் சிங்காரவேலர் நினைவரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. மாநாட்டின் தலைமை குழுவாக மாவட்ட தலைவர் சேவையா, துணைத் தலை–வர்கள் சாமிக்கண்ணு, பரிமளா ஆகியோர் தலைமை வகித்தனர்.

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் 13-வது மாவட்ட மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணை தலைவர் முத்துக்குமரன் வாசித்தார். மாநாட்டில் மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன் வரவேற்று பேசினார். ஏ. ஐ. டி.யூ.சி தேசிய செயலாளர் வகிதா நிஜாம் மாநாட்டினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் தில்லைவனம் முன் வைத்தார். மாவட்ட பொரு–ளாளர் கோவிந்தராஜன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    மாநாட்டினை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.

    பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்நாதன், தீர்மானங்களை வாசித்தார். மாநில செயலாளர் சந்திர–குமார் மாநாட்டினை நிறைவு செய்து உரை–யாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் மணி மூர்த்தி நன்றி கூறினார்.

    மாநாட்டில், ஒன்றிய அரசு தொழிற்சங்க சட்டங்கள் சுருக்கி திருத்தியதை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும், உடன–டியாக பட்டு கைத்தறிவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், போக்குவரத்து, மின்வாரியம், நுகர்பொருள், ஆவின் உள்ளிட்ட மத்திய ,மாநில பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், தனியார்மய நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும், சிறு குறு தொழில்களை மேம்–படுத்தவும், பாதுகாக்கவும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

    மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வுகளை திரும்பப் பெற வேண்டும், கட்டுமானம், உடலுழைப்பு, கைத்தறி, ஆட்டோ உள்ளிட்ட நல வாரியங்களை பாதுகாப்பதுடன் நல–வாரியங்களில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தஞ்சாவூரை மையமாக கொண்டு சட்ட கல்லூரியை உருவாக்க வேண்டும்

    பாரதிதாசன் பல்கலைக்–கழகத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகளை பிரித்து தஞ்சையை மையமாகக் கொண்டு தனிப் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும், தெரு வியாபாரிகளை கணக்கில் எடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும், திலகர் திடல் அம்மா மாலை நேர காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு மின் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், தஞ்சாவூரில் நவீன கட்டமைப்புடன் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மாநாட்டில் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    • பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், தேர்தல் காலை வாக்குறுதிகளின்படி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.‌

    இதில் நிர்வாகிகள் அறிவழகன், கருணாநிதி, ராமாமிர்தம், சுகந்தி, நாவலரசன், முத்துராமன், மதிவாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சிவ ரவிச்சந்திரன், முன்னாள் படை வீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் பாஸ்கரன், மருத்துவத்துறை ஆய்வக நுட்பனர் சங்கம் மாநில செயலாளர் சாந்தராமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழ்வாணன், முடக்கு வட்ட செயலாளர் அஜய் ராஜ், ஒரத்தநாடு வட்ட செயலாளர் தம்பிஐயா, அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் ஹேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட பொருளாளர் மதியழகன் ஆகியோர் நன்றி கூறினர்.

    ×