search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening water"

    மேட்டூர் அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் இன்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. கடந்த சில நாட்களாக 100 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 28 கன அடியாக சரிந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் 68.67 அடியில் இருந்து 68.55 அடியாக குறைந்து விட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் இன்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. #Metturdam

    நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இருந்தபோதும் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காகவும் வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்து வதற்காகவும் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. முதல்போக சாகுபடி முடிவடைந்து 2-ம் போக சாகுபடியில் ஈடுபட்டுள்ள பள்ளத்தாக்கு விவசாயிகள் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து இன்று காலை முதல் பெரியாறு அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று வரை 467 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 48 கன அடி. இருப்பு 2312 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.03 அடி. வரத்து 87 கன அடி. திறப்பு 860 கன அடி. இருப்பு 2724 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.20 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 95.77 அடி.

    நீர்மட்டம் குறைந்து வருவதால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. #VaigaiDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தில் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை குறிப்பிடப்படும் படியான மழை பெய்யவில்லை.

    மேலும் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் முழு கொள்ளளவை எட்டியிருந்த வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக 64 அடியாக குறைந்தது.

    மேலும் புயல் காரணமாக கடந்த சில நாட்களில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.

    நேற்று 4520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 2170 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணைக்கு 1452 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 64.11 அடியாக உள்ளது. நீர் இருப்பு 4434 மி. கன அடி.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.10 அடி. வரத்து 1720 கன அடி. திறப்பு 450 கன அடி. இருப்பு 4504 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. அணைக்கு வரும் 223 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.50 அடி. முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 109 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. #VaigaiDam

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1,306 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,227 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 33.69 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 33.52 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ×