search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    நீர்மட்டம் குறைந்து வருவதால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. #VaigaiDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தில் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை குறிப்பிடப்படும் படியான மழை பெய்யவில்லை.

    மேலும் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் முழு கொள்ளளவை எட்டியிருந்த வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக 64 அடியாக குறைந்தது.

    மேலும் புயல் காரணமாக கடந்த சில நாட்களில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.

    நேற்று 4520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 2170 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. அணைக்கு 1452 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 64.11 அடியாக உள்ளது. நீர் இருப்பு 4434 மி. கன அடி.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.10 அடி. வரத்து 1720 கன அடி. திறப்பு 450 கன அடி. இருப்பு 4504 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. அணைக்கு வரும் 223 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.50 அடி. முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 109 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. #VaigaiDam

    Next Story
    ×