search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New commissioner"

    • நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.
    • கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் இன்னும் நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் நகராட்சிக்கு நியமிக்கப்பட்ட முதல் கமிஷனர் முகமது சம்சுதீனுக்கு பிறகு இதுவரை நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படாத நிலை இருந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

    கடைசியாக வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமார் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக இருந்து வந்த நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக திருத்துறைப்பூண்டி கமிஷனராக பணியாற்றி வந்த அப்துல் ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    • நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த அவினாஸ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பது, குற்ற செயல்களை தடுப்பதே எனது முதல் கடமையாக இருக்கும். கஞ்சா விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

    நெல்லை:

    நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த அவினாஸ் குமார் மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த ராஜேந்திரன் பணி மாறுதல் செய்யப்பட்டு நெல்லை மாநகர புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    கமிஷனர் பொறுப்பேற்பு

    அவர் இன்று நெல்லை வந்தார். அவருக்கு கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு, காவல்துறை உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள கோப்புகளில் கையெ ழுத்திட்டு , புதிய கமிஷனராக ராஜேற்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடுமையான நடவடிக்கை

    சட்டம்- ஒழுங்கை பாது காப்பது, குற்ற செயல்களை தடுப்பதே எனது முதல் கடமையாக இருக்கும். கஞ்சா விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    கஞ்சா விற்பனை தொடர்பாக எந்த தகவல் இருந்தாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 9498122722 என்ற எனது எண்ணில் தகவல் தெரிவித்தால் அவர்களின் ரக சியம் பாதுகாக்கப்பட்டு கஞ்சா கும்பல் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    குற்றச்செயல்

    குற்றச்செயலில் ஈடுபடு பவர்களுக்கு நெல்லை மாநகர பகுதியில் இடம் இல்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறைடன் இணைந்து மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையவும், தேவையற்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவதை தவிர்க்கவும் அனைத்து விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பணிச்சுமையை போக்க சென்னை போன்று நெல்லையிலும் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். காவல்துறை யினர் பணி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த நெல்லை மாநகர் பகுதியில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் உடலில் பொருத்தப்படும் காமிரா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாநகர பகுதிகளில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் விதமாக சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டை நகராட்சியில் புதிய கமிஷனர் பதவி ஏற்றார்.
    • இவர் அம்பாசமுத்திரம் நகராட்சியில் கமிஷனராக பணியாற்றியவர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்த இளவரசன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு மாறுதலாக சென்றார்.

    இந்நிலையில் அம்பாசமுத்திரம் நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்த பார்கவி தற்போது செங்கோட்டை நகராட்சி ஆணையளராக பொறுப்பேற்றார்.

    அவருக்கு நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமி, நகராட்சி மேலாளர் ரத்தினம், பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் ராமசந்திரன், சுகாதார ஆய்வாளர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×