search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muneeswarar temple"

    • விழாவையொட்டி கோவில் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
    • நாடு வளர்ச்சியடையவும்,மழை பொழிந்து விவசாயம் செழித்திடவும், சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மில்லர்புரம் பர்மா காலனியில் அமைந்திருக்கும் முனீஸ்வரர் கோவிலில் 28-ம்ஆண்டு கொடை விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி கால்நட்டு விழா நடந்தது. அதன் பின்னர் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    திருவிளக்கு பூஜை

    விழாவையொட்டி கோவில் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. நேற்று மாலை முனீஸ்வரர், மாரியம்மன் கண்திறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து நாடு வளர்ச்சியடையவும், எல்லா மக்களுக்கும் எல்லா செல்வங்களும் கிடைக்க வேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழித்திடவும், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டியும் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடை பெற்றது.

    இன்று காலை தீர்த்தகரை சென்று வந்தனர். பின்னர் மதியம் சிறப்பு பூஜையுடன் 2 ஆயிரம் பேருக்கு பொது சமபந்தி விருந்து நடைபெற்றது.

    மாலையில் சிறப்பு பூஜையுடன் தொடர்ந்து பொங்கலிடுதல், முளைப்பாரி ஊர்வலம், அதனை தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்துடன் சாமக்கொடை விழா நடைபெறுகிறது.

    பின்னர் இரவு அன்னதானம் நடை பெறுகிறது. அன்னதானத்தை பண்டாரவிளை வைத்தியர் முருகேசன் நாடார் தொடங்கி வைக்கிறார்.

    கலந்து கொண்வர்கள்

    கோவில் கொடை விழாவை முன்னிட்டு தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், மாநில பேச்சாளார் சரத்பாலா, வட்ட செயலாளர் கீதாமாரியப்பன், தொழிலதிபர்கள் பொன்னப்பன், குமார், ஆனந்த், சசிகுமார் மற்றும் பல்வேறு ஊர் பொதுமக்கள் உள்பட சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமர், தர்மகர்த்தா கந்தகுமார், செயலாளர் சரவணன், பொருளாளர் தங்கமாரியப்பன், துணை தர்மகர்த்தா கணேசன், பொருளாளர் அன்புராஜ், செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.

    • 2 வருடங்களாக, கொரோனா தொற்று தடை காரணமாக பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை.
    • பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக, கொரோனா தொற்று தடை காரணமாக பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை. இந்த வருட பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, வீரமாத்தியம்மனுக்கு பூஜை,முனீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேக பூஜை,பொங்கல் சாட்டுதல், முனீஸ்வரர் சுவாமிக்கு அலங்காரம் மற்றும் கண் திறப்பு பூஜை, கன்னிமார் சுவாமி அம்மன் அழைப்பு ,படுகளம் மற்றும் உடுக்கை பாட்டு,சுவாமிக்கு பொங்கல் படைத்தல் ,உருவாரம் எடுத்து வருதல் ,சுவாமிக்கு அலங்காரம் மற்றும் உச்சி கால மகா பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் 150க்கும் மேற்பட்ட பன்றிகள்,100க்கும் மேற்பட்ட ஆட்டுகிடாக்கள்,சேவல்கள் பலியிடப்பட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக பொங்கல் விழாவை முன்னிட்டு புதிய சிற்பிகள் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் திண்டு பாலுவின் ராயல் ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னிசை நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் கவிதா ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.

    விழாவிற்கு மன்றத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். திண்டுபாலு, மோகனகண்ணன், ஜெயபாலன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவிக்கண்ணன் வரவேற்றார்.இதில் கவுன்சிலர்கள் சசிரேகா ரமேஷ்குமார் ,தண்டபாணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.காவல் துறை,பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிகள் செய்யப்பட்டு இருந்தது. திருவிழாவில் பல்லடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

    ×