என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Military regime"

    • இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
    • இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

    மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான பள்ளி ஜனநாயக ஆதரவு இயக்கத்தால் நடத்தப்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு தீவிரமான சண்டை எதுவும் இல்லை.

    தாக்குதலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) இந்த சம்பவத்தை கண்டித்தது.

    மியான்மர் ராணுவம் அரசு ஊடகங்கள் மீதான தாக்குதலை மறுத்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், நேரில் கண்ட சாட்சிகளும் சுயாதீன ஊடக அறிக்கைகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.

    மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சாகைங் பகுதியில் இதுபோன்ற தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன. அதில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தும் உள்ளனர். 

    தமிழகத்தில் ராணுவ ஆட்சி நடப்பதாக திருவண்ணாமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலைக்கு மத்திய அரசு மும்முரம் காட்டுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த சாலை திட்டத்தை போராடி பெற்றதாகவும், இச்சாலை அமைந்தால் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிற் வளர்ச்சி பெருகும் என ஒரு முறை கூறினார்.

    சேலம் விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும்போது பசுமை சாலை மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். மாநில அரசு நிலத்தை ஆர்ஜிதம் மட்டுமே செய்து கொடுக்கிறது என்றார். இப்போது எடப்பாடி பழனிசாமி மாறி மாறி பேசுகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதமே பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. அதன்பிறகே மத்திய அரசு சாலை அமைக்கும்பணியை தொடங்கியது. பசுமை சாலை அமைக்க அவசரம் எதற்கு?

    விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து தான் போராடுகின்றனர். அவர்களை யாரும் தூண்டி விடவில்லை. நீர் நிலைகள், மலைகள், இயற்கையை அழித்து பசுமை சாலையை அமைப்பது என்பது சரியான திட்டமாக தெரியவில்லை.


    1 ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்கின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை சந்தித்து திட்டம் குறித்து விளக்கியிருக்க வேண்டும்.

    பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலத்தை விட்டுக் கொடுக்க யாருக்கும் மனசு வராது. அரை ஏக்கர் நிலத்திற்காக சுப்ரீம் கோர்ட்டு வரை செல்லும் சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம்.

    பசுமை சாலை அமைக்க மும்முரம் காட்டும் எடப்பாடி அரசு, அதே வேகத்தில் நீட் தேர்வில் விலக்கு கொண்டு வர மத்திய அரசிடம் போராடி இருக்க வேண்டும். விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்று எடப்பாடி கூறி கொள்கிறார்.

    ஆனால், விவசாயிகளின் கஷ்டங்களை அவர் அறியவில்லை. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை. அந்த சாலையை விரிவுப்படுத்தினாலே போதும்.

    பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பேச்சு, கருத்து, எழுத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்கு போடுகின்றனர். குரல் வளையை நெரிக்கின்றனர். தமிழகத்தில் ராணுவ ஆட்சி நடக்கிறது.

    அம்மாவின் ஆட்சி நடப்பதாக எடப்பாடி கூறுகிறார். இது அம்மாவின் ஆட்சியே கிடையாது.

    18 எம்.எல்.ஏ.க்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த வழக்கால், எடப்பாடி அரசு தப்பித்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Edappadipalanisamy
    ×