என் மலர்
நீங்கள் தேடியது "Metur Dam"
- சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- மேட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதேபோல் சேலம் மாவட்டத்திலும் வருகிற 12ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார்.
இதற்காக சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை இன்று சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர்அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் மேட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறார். தொடர்ந்து இரவு மேட்டூரில் தங்குகிறார்.
தொடர்ந்து மறுநாள் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று 1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1200 கோடி மதிப்பிலான நல உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் பிருந்தாதேவி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், கூடுதல் கலெக்டர் பொன்மணி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன், டீன் தேவிமீனாள் மற்றும் அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறியதாலும், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது.
கால தாமதமாக அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பயிர்களும் கருகியது. இந்த ஆண்டும் கடந்த மாதம் 12-ந் தேதி குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.
இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து நேராக மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது.
நேற்று அணைக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 1 லட்சத்து ஆயிரத்து 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 109 அடியாக உயர்ந்து உள்ளது. அணை நிரம்ப இன்னும் 11 அடி தான் தேவைப்படுகிறது.
பொதுவாக நீர்மட்டம் 90 அடியாக இருக்கும்போது நீர்வரத்தும் சீராக இருந்தால் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 109 அடி தண்ணீர் இருப்பதால் அணையில் இருந்து 19-ந் தேதி (இன்று) பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.
இந்த தண்ணீர் அணையின் மதகு வழியாக சீறிப் பாய்ந்து வெளியேறியது. முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
முதலில் அணையின் வலதுகரை பகுதியில் மேல்மட்ட மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது.
மேட்டூர் அணை கட்டி 84 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக முதல்-அமைச்சர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிப்பதால் அதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வருகின்றனர். அவர்கள் மேட்டூர் அணை பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery #EdappadiPalaniswami






