search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malayamman Temple"

    • ஆடிப்பூர வளைகாப்பு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனை நடைபெற்றது.
    • தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் அலமேலு மங்கா பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து பெண்கள் மங்களப் பொருட்களுடன் சீர்வரிசை கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.

    மங்களப்பொருட்கள்

    இதனை முன்னிட்டு கோவில் நடை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனை நடைபெற்றது. வளைகாப்பு திருவிழாவை முன்னிட்டு தனுஷ்கோடி யாபுரம் தெருவில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் அலமேலு மங்கா பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து பெண்கள் மங்களப் பொருட்களுடன் சீர்வரிசை கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கா பத்மாவதி தாயார் அலங் கரிக்கப்பட்ட பல்லக்கில் கோலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தனலட்சுமி பஐனை குழுவினரின் பக்தி பாடல்கள் முழங்க ஊர்வல மாக வந்து மாலையம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், முன்னாள் தலைவர் பூவலிங்கம், துணைத் தலைவர் பரமசிவம், துணைச்செயலாளர் மணிமாறன், கவுரவ ஆலோசகர் மாதவராஜ், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வாணியர் பேரவை மாவட்ட தலைவர் பழனிகுமார், மாரிக் கண்ணன், மீனாட்சிசுந்தரம், சின்னதம்பி, முனிய செல்வம், நிர்வாக குழு உறுப்பினர்கள், முன்னாள் பொருளாளர் கருப்பசாமி, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், ரமேஷ், மதன், மாரிமுத்து, செல்வா, சுந்தர், மாரிச்செல்வக்குமார், நம்பிராஐன், தங்க மாரி யப்பன், ஸ்ரீமாலையம்மன் பஐனை குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி -அம்பாளை தரிசனம் செய்தனர்.

    பின்னர் அனைவருக்கும் மங்களப் பொருட்கள், இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வணிக வைசிய சமூகத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவில் அருகில் உள்ள பூபதி ரத்தினம் மஹாலில் அன்னதானம் நடைபெற்றது. இதேபோன்று பத்திரகாளி அம்மன் கோவில், செண்பகவல்லி அம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில், மந்திதோப்பு பூமாதேவி கோவில் உள்ளிட்ட ஏராளமான அம்மன் கோவில்களில் வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.

    • பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, கரும்புதொட்டில் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
    • சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே உள்ள பட்டிகுளம் கிராமத்தில் யோகசக்தி விநா யகர் மாலை யம்மன் கோவில் திருவிழா கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுத லுடன் தொடங்கி யது. விழாவில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    இதைதொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, கரும்புதொட்டில் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பட்டிகுளம், இலுப்பபட்டி, கணவாய்பட்டி, சின்னஅரவக்குறிச்சி, வேலூர் ஆகிய ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு பந்தல்கால் நடப்பட்டு அதனை அடுத்து மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் முன்பு வானவேடிக்கைகள் முழங்க பந்தல்கால் நடப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு முன்னதாக தனுஷ்கோடியாபுரம் தெருவில் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்திய ப்பட்ட பூபதி ரத்தினம் மஹால் திறக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு நேற்று காலை மகேஸ்வரர் சமேத ஸ்ரீ மாலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு பந்தல்கால் நடப்பட்டு அதனை அடுத்து மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் முன்பு வானவேடிக்கைகள் முழங்க பந்தல்கால் நடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக தனுஷ்கோடியாபுரம் தெருவில் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்திய ப்பட்ட பூபதி ரத்தினம் மஹால் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், சங்கத் துணைத் தலைவர் பரமசிவம்'என்ற பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மாரிக்கண்ணன், பாலாஜி, சின்னத்துரை,

    மாதவராஜ், காளிதாஸ், முனிய செல்வம், சின்னதம்பி, கல்யாணசுந்தரம், மீனாட்சி சுந்தரம், நம்பிராஐன், சிவானந்தம், சங்கர், குமார், கார்த்திக், மதன், சுபாஷ்ஜெயந்த், செல்வம், சீனிவாசன், மாரிச்செல்வக்குமார், செல்லம், ராஜா, மாரிச் செல்வம், செல்வகுமார், ஸ்ரீமாலையம்மன் பஜனை குழு பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்தனர்.

    கும்பாபிஷேகத்திற்கு சில தினங்களே உள்ள சூழ்நிலையில் கோவில் முன்பு இருந்த பாலத்தை நீர்நிலை ஆக்கிரமிப்பு என வருவாய் துறையினர் இடித்தனர்.

    தற்போது கும்பாபிஷேகம் வரும் சூழ்நிலையில் கழிவு நீர் சாக்கடையில் இறங்கி கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளதால் பாலத்தை அரசு விரைவில் கட்டிதர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    ×