search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே மாலையம்மன் கோவில் திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் மாலையம்மன்.

    நத்தம் அருகே மாலையம்மன் கோவில் திருவிழா

    • பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, கரும்புதொட்டில் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
    • சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே உள்ள பட்டிகுளம் கிராமத்தில் யோகசக்தி விநா யகர் மாலை யம்மன் கோவில் திருவிழா கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுத லுடன் தொடங்கி யது. விழாவில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    இதைதொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, கரும்புதொட்டில் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பட்டிகுளம், இலுப்பபட்டி, கணவாய்பட்டி, சின்னஅரவக்குறிச்சி, வேலூர் ஆகிய ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×