search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madurai hospital"

    வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamal #ElectionCommission #maduraigovernmenthospital

    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சூலூர் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலுக்கான பிரசாரத்துக்காக இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    கேள்வி:- வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரம்?

    பதில்:-தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல் படவேண்டும் என்பது எல்லோருடைய எதிர் பார்ப்பும் கூட. அவர்கள் எல்லா கட்சியினரையும் அழைத்து பேசி இருக்கலாம். அப்படி செய்யாமல் வேட்பாளர்களிடம் மட்டும் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

    அது தவறு. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை திறக்க கூடாது என்பதே எங்களது வலியுறுத்தல். எந்த திருத்தங்களாக இருந்தாலும் அவற்றுக்கான சரியான விளக்கங்கள் கொடுத்த பிறகே செய்யப்பட வேண்டும்.

    கே:- மதுரை மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் பலியான சம்பவம் பற்றி?

    ப:- சினிமா தியேட்டர் முதல் சின்ன சின்ன கடைகள் வரை ஜெனரேட்டர் வசதி இருக்கும்போது உயிரை காக்கும் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் வசதி செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமான வி‌ஷயம்.

    கே:- ஜெனரேட்டர் பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறதே?

    ப:- எல்லாமே இருக்கிறது. ஆனால் பழுதாகி இருக்கிறது என்பதுதான் அரசின் பிரச்சினையே...அரசே பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் என் கருத்து. அதை ஜெனரேட்டர் வைத்து சரி செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #kamal #ElectionCommission #maduraigovernmenthospital

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில்தான் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இறப்புக்கு ஆஸ்பத்திரி காரணம் அல்ல என்று ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறினார். #MaduraiGovernmenthospital
    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெய்த மழை காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

    அப்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    மின்தடை ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை. ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    பலியான ரவிச்சந்திரன் - மல்லிகா

    ஆனால் இதனை அரசு ஆஸ்பத்திரியில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஆஸ்பத்திரியில் ஜெனரேட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது. மின்தடை ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி தான் அவர்கள் இறந்துள்ளனர் என ஆஸ்பத்திரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறுகையில், நேற்று மழை பெய்தபோது ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது உண்மை தான். ஜெனரேட்டரும் உடனடியாக இயக்க முடியவில்லை. ஆனால் ஏற்கனவே வெண்டிலேட்டரில் 2 மணி நேர அளவுக்கு மின்சார ‘பேக் ஆப்’ இருந்தது.

    இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு எந்தவித தடையுமின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

    ஏற்கனவே இறந்த நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில்தான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி தான் இறந்துள்ளனர். எனினும் உறவினர்களின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார். #MaduraiGovernmenthospital

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் இயங்காததால் அவர்கள் இறந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. #MaduraiGovernmenthospital
    மதுரை:

    மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு விபத்து மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவசர சிகிச்சை பிரிவில் மதுரை அருகே உள்ள பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா (வயது 50), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (60), உடுமலைப்பேட்டை ஆறுமுகம், செல்லத்தாய் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு மல்லிகா, ரவிச்சந்திரன், பழனியம்மாள் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இன்று ஆறுமுகம், செல்லத்தாய் ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர்.

    மதுரையில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அரசு ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள் மீது விழுந்ததில் மின் தடை ஏற்பட்டது.

    2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மின் தடையால் அரசு ஆஸ்பத்திரியில் வெண்டிலேட்டர் இயங்கவில்லை எனவும், இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேரும் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வெண்டிலேட்டர் இயங்காததால் 5 பேர் இறந்தது குறித்த தகவல் அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் இன்று மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள், அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரியும் வலியுறுத்தினர்.

    இந்த சம்பவத்தில் இறந்த மல்லிகாவின் உறவினர் கணேசன் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு தான் மல்லிகாவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். நேற்று காலை கூட அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார்.
    மாலையில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு வைக்கப்பட்டிருந்த வெண்டிலேட்டர் இயங்கவில்லை. ஜெனரேட்டரையும் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் மல்லிகாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே இறந்து விட்டார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

    இதே போல் இறந்த ரவிச்சந்திரனின் உறவினர் மாரீஸ்வரன் கூறுகையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இங்கு வந்து சேர்த்தோம். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆபரேசன் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    நாளை ஆபரேசன் செய்ய இருந்த நிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று மின்தடை ஏற்பட்ட உடனேயே ரவிச்சந்திரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    அரசு மருத்துவமனையில் அவசர காலங்களில் ஜெனரேட்டரை இயக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  #MaduraiGovernmenthospital
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #sterliteprotest
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜலிங்கம் (வயது 38), வீரபாபு (17), காளிமுத்து (32), சக்திவேல் (34) ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனிப்பிரிவில் சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #sterliteprotest
    ×