search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodai Ceremony"

    • சித்திரை பொங்கல் வழிபாடு இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.
    • பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    நாகர்கோவில்:

    அருமனை அருகே உள்ள ஒற்றயால்விளை மாத்தூர்கோணம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா மற்றும் சித்திரை பொங்கல் வழிபாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 7 மணிக்கு தேவி பாராயணம், 10.30 மணிக்கு களபாபிஷேகம், 11 மணிக்கு சமய சொற்பொழிவு, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு லட்சதீபம், இரவு 7.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8.30 மணிக்கு சிற்றுண்டி ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் நிர்மால்யம், உஷபூஜை, தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சுமங்கலி பூஜை, 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 15-ந் தேதி மாலை 4 மணிக்கு பூநீர் கும்ப பவனி, இரவு 2.30 மணிக்கு குருதி பூஜை ஆகியவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு துலாபாரம், 8.30 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு சித்திரை பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வலியபடுக்கை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    • கீழக்கடையம் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்திர காளியம்மன் கோவில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • கடையம் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது.

    கடையம்:

    கீழக்கடையம் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்திர காளியம்மன் கோவில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து கோவிலில் கடந்த 24-ந்தேதி இரவு திருக்கால் நாட்டுதல் நடைபெற்றது. பின்னர் தினமும் அம்மனுக்கு காலை ,மாலை தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று காலை வடக்கு உடையார் பிள்ளையார் கோவிலிருந்து, 18 பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக பால்குடம் மற்றும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து இரவு திரலான பக்தர்களின் காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது. பின்னர் நாளை (புதன்கிழமை), நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை,மாலை அம்மனுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜை நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருத்தேர் கால்நாட்டுதல் நடைபெறுகிறது. பின்னர் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)இரவு அம்மன் கண் திறப்பு. 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 18 பட்டிகளுக்கு அம்மன் ஊர் விளையாடல், பின்னர் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் அல தீர்த்தம், அம்மன் ஊர் விளையாடல் நடைபெறுகிறது.

    இரவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், நள்ளிரவில் அலதீர்த்தம், நையாண்டி மேளம் வாணவேடிக்கையுடன் சிறப்பு பூஜை, அம்மன் பூ பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் திருத்தேரில் எழுந்தருளி மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது.

    பின்னர் அன்னதானம் நடக்கிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா நடத்தும் 4-ம் திருநாள் மண்டகபடிதாரர்கள் கீழக்கடையம் வரிதாரர்கள் மற்றும் 18 பட்டி ஊர் பொதுமக்கள் செய்துள்ள னர்.

    இதே போல் கடையம் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இன்று காலை தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வருதல் , மதியம் அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.விழாவில் பிப்ரவரி 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 8-ந் திருநாளில் காலையில் அபிஷேகம் மற்றும் அலகு தீர்த்தம் எடுத்து வருதல்,வில்லிசை, மதியம் கொடை ,சிறப்பு அபிஷேகம், தீபாரதனை, இரவு அலகு தீர்த்தம் எடுத்தல் நடைபெறுகிறது.

    பின்னர் திருநாண் பூட்டுதல், அம்பாள் திருத்தேர்க்கு எழுந்தருளல், திருத்தேர் வடம்பிடித்தல் நடை பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3-ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள் மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்துள்ள னர்.

    ×