search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitrai Pongal Worship"

    • சித்திரை பொங்கல் வழிபாடு இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.
    • பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    நாகர்கோவில்:

    அருமனை அருகே உள்ள ஒற்றயால்விளை மாத்தூர்கோணம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா மற்றும் சித்திரை பொங்கல் வழிபாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 7 மணிக்கு தேவி பாராயணம், 10.30 மணிக்கு களபாபிஷேகம், 11 மணிக்கு சமய சொற்பொழிவு, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு லட்சதீபம், இரவு 7.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8.30 மணிக்கு சிற்றுண்டி ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் நிர்மால்யம், உஷபூஜை, தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சுமங்கலி பூஜை, 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 15-ந் தேதி மாலை 4 மணிக்கு பூநீர் கும்ப பவனி, இரவு 2.30 மணிக்கு குருதி பூஜை ஆகியவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு துலாபாரம், 8.30 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு சித்திரை பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வலியபடுக்கை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    ×