என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Killed by a train"

    • தண்டவாளத்தை கடந்த போது விபரீதம்
    • ரெயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

    அரக்கோணம்:

    தென் மாநிலங்களுக்கான முதல் வந்தே பாரத் ரெயில் மைசூரு - சென்னை இடையே கடந்த 12-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில், மைசூருவில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் மாலை வந்தே பாரத் ரெயில் சென்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மேல் பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கன்றுக்குட்டி மீது ரெயில் மோதியது.

    இதில் கன்றுக்குட்டி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதன் காரணமாக வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் வழியிலேயே நின்று பின்னர், மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

    இந்த விபத்தால் ரெயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

    ஏற்கனவே குஜராத் மாநிலம் காந்தி நகர் - மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் ரெயில் கால்நடைகள் மீது மோதிய விபத்தில் ரெயிலின் முன்பக்கம் பகுதி பழுதடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தம் அடுத்த அநாகநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் இவரது மகள் சுஜித்ரா (வயது 27) இவர் நேற்று குடியாத்தம் வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்தார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50).வேலூர் மாநகராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் இன்று காலை கழிஞ்சூரில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில் தண்டவாள பகுதியில் பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • முகம் சிதைந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல்

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தம் அடுத்த வளத்தூர் ரெயில் நிலையத்தில் சுமார் 35 வயது மதிக்கதக்க பெண் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி அடையாளம் தெரியாத வகையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தண்டவாளம் முழுவதும் உடல் சிதறி கிடந்ததால் இறந்தவர் யார் என அடையாளம் காண முடியவில்லை. உருக்குலைந்த நிலையில் இருந்த உடலை சேகரித்து பிரத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முகம் முழுவதும் சிதைந்த உள்ளதால் இறந்தவர் யார்? என கண்டுபிடிக்க சவாலாக உள்ளது.

    மேலும் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 73) இவர் நேற்று ஆம்பூர் அருகே கீழ்ப்பட்டில் உள்ள வங்கிக்கு பணம் எடுத்து சென்று வருவதாக வீட்டில் கூறி வெளியே சென்றார்.

    அப்போது ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தம் அடுத்த கண்ணித்தோப்பு பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன் இவரது மகன் சண்முகம் (வயது 34) இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்கின்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

    இன்னிலையில் நேற்று ஆட்டோ டிரைவர் சண்முகம் குடியாத்தம் வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஆம்பூர் அடுத்த காமராஜர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மனைவி பவுனம்மாள் (வயது 62) இவர் நேற்று பச்சகுப்பம் ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற ஒரு ரெயிலில்அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோ லார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×