search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மோதி பெண் பலி
    X

    ரெயில் மோதி பெண் பலி

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • முகம் சிதைந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல்

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தம் அடுத்த வளத்தூர் ரெயில் நிலையத்தில் சுமார் 35 வயது மதிக்கதக்க பெண் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி அடையாளம் தெரியாத வகையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தண்டவாளம் முழுவதும் உடல் சிதறி கிடந்ததால் இறந்தவர் யார் என அடையாளம் காண முடியவில்லை. உருக்குலைந்த நிலையில் இருந்த உடலை சேகரித்து பிரத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முகம் முழுவதும் சிதைந்த உள்ளதால் இறந்தவர் யார்? என கண்டுபிடிக்க சவாலாக உள்ளது.

    மேலும் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×