இளம்பெண் ரெயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம் போலீசார் விசாரணை
இளம்பெண் ரெயில் மோதி பலி
Published on

ஜோலார்பேட்டை:

குடியாத்தம் அடுத்த அநாகநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் இவரது மகள் சுஜித்ரா (வயது 27) இவர் நேற்று குடியாத்தம் வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்தார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com