என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kelampakkam accident
நீங்கள் தேடியது "Kelampakkam accident"
கேளம்பாக்கம் அருகே இன்று காலை கல்லூரி பஸ் உரசியதில் ஆட்டோ ஓரத்தில் பயணித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
கூவத்தூரை அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெற்றி (வயது5). கல்பாக்கத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று காலை வெற்றி வழக்கம் போல் ஆட்டோவில் சக மாணவர்களுடன் பள்ளிக்கு சென்றான். அவன் ஆட்டோவில் பின் பக்க சீட்டின் ஓரத்தில் அமர்ந்து இருந்தான்.
கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் திடீரென ஆட்டோவை உரசியபடி முந்தி சென்றது.
இதில் ஆட்டோ ஓரத்தில் அமர்ந்திருந்த வெற்றியின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த மற்ற அனைவரும் காயமின்றி தப்பினர்.
படுகாயம் அடைந்த வெற்றியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூவத்தூரை அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெற்றி (வயது5). கல்பாக்கத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று காலை வெற்றி வழக்கம் போல் ஆட்டோவில் சக மாணவர்களுடன் பள்ளிக்கு சென்றான். அவன் ஆட்டோவில் பின் பக்க சீட்டின் ஓரத்தில் அமர்ந்து இருந்தான்.
கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் திடீரென ஆட்டோவை உரசியபடி முந்தி சென்றது.
இதில் ஆட்டோ ஓரத்தில் அமர்ந்திருந்த வெற்றியின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த மற்ற அனைவரும் காயமின்றி தப்பினர்.
படுகாயம் அடைந்த வெற்றியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X