search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பலியான வெற்றி.
    X
    விபத்தில் பலியான வெற்றி.

    கேளம்பாக்கம் அருகே ஆட்டோ ஓரத்தில் பயணித்த மாணவன் பஸ் உரசி பலி

    கேளம்பாக்கம் அருகே இன்று காலை கல்லூரி பஸ் உரசியதில் ஆட்டோ ஓரத்தில் பயணித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    கூவத்தூரை அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெற்றி (வயது5). கல்பாக்கத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இன்று காலை வெற்றி வழக்கம் போல் ஆட்டோவில் சக மாணவர்களுடன் பள்ளிக்கு சென்றான். அவன் ஆட்டோவில் பின் பக்க சீட்டின் ஓரத்தில் அமர்ந்து இருந்தான்.

    கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் திடீரென ஆட்டோவை உரசியபடி முந்தி சென்றது.

    இதில் ஆட்டோ ஓரத்தில் அமர்ந்திருந்த வெற்றியின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த மற்ற அனைவரும் காயமின்றி தப்பினர்.

    படுகாயம் அடைந்த வெற்றியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×