search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karumeni river"

    • கருமேனிஆற்றிற்கு எதிர் திசையில் சிறுநாடார்குடியிருப்பு முதல் தாண்டி அமராபுரம் வரை சுமார் 3 கிலா மீட்டர் தூரம் தண்ணீர் ஏறி நிற்கிறது.
    • இதுபோன்று நிறைய தடுப்பணைகளில் நீர் ஏறி நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் தடுப்பணை கட்டி நீரைச் சேமித்தால் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

    உடன்குடி:

    உடன்குடி பகுதி வழியாக செல்லும் கருமேனி ஆற்றில் சாத்தான்குளம், சுப்பராயர்புரம், ஆத்திக்காடு, சொக்கலிங்கபுரம், (குட்டத்தார்விளை) மணிநகர், உதிரமாடன்குடியிருப்பு, அமராபுரம், மணப்பாடு ஆகிய இடங்களில் சின்ன சின்னபாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பாலத்தின் அடியிலும் திறப்பு வசதியுடன் கூடிய 5 அடி உயரமுள்ள தடுப்பணை அமைக்க வேண்டும். அவற்றை கருமேனி ஆற்றின் கழிமுக பகுதியான மணப்பாடு அருகிலிருந்து ஒவ்வொன்றாக நிரப்பி அடைக்க வேண்டும். கருமேனிஆற்றின் கடைசி தடுப்பணை மணப்பாடு புதிய பாலம் அருகில் உள்ளது.

    அது நிரம்பி கடலுக்கு வழியும் முன்பாக கருமேனிஆற்றிற்கு எதிர் திசையில் சிறுநாடார்குடியிருப்பு முதல் தாண்டி அமராபுரம் வரை சுமார் 3 கிலா மீட்டர் தூரம் தண்ணீர் ஏறி நிற்கிறது. எனவே இதுபோன்று நிறைய தடுப்பணைகளில் நீர் ஏறி நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் தடுப்பணை கட்டி நீரைச் சேமித்தால் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். அதுபோல ஸ்ரீவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய் மூலம் வரும் தண்ணீர் கடம்பாகுளத்தின் கீழுள்ள 13 பாசன குளங்களையும் நிரப்பிய பின்னர் எஞ்சிய உபரிநீர் திருச்செந்தூர் அருகே உள்ள எல்லப்பநாயக்கன் குளத்திற்கு வரும். பின்பு குலசேகரன் பட்டினம் தருவைக்குளத்திற்கு வந்து மறுகால் விழுந்து அதுவும் கருமேனி ஆற்றிற்கு தான் வர வேண்டும். இரு வழியாக கருமேனி ஆற்றிற்கு தண்ணீர் வந்தால், உடன்குடி வட்டார வறட்சி பகுதிகளை காப்பாற்ற முடியும். நிலத்தடி நீரை பாதுகாக்க கருமேனி ஆற்றை பராமரிக்க வேண்டும் என்று விவசயிகள் சார்பில், நற்பணி நாகராஜன் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

    • கருமேனி ஆற்றில் சுப்பராயபுரம் அணைக்கட்டுக்கு இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
    • அமைச்சர் துரைமுருகனை, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மதகுகள் அமைக்க கோரி மனு அளித்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் கருமேனி ஆற்றில் சுப்பராயபுரம் அணைக்கட்டுக்கு இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.அதன் இரண்டு கரைகளும் பலப்படுத்தப்படாமலும் மதகுகள் இல்லாமலும் உள்ளதால் வெள்ள நேரங்களில் மழைநீர் அருகில் உள்ள வயல்களில் புகுந்து பயிர்களுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மழைக்காலங்களில் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தடுப்பணை கரைகளை பலப்படுத்த வேண்டும். மதகுகள் அமைக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜிடம் முறையிட்டனர்.

    அதனைத் தொடர்ந்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கருமேனி ஆற்றில் கட்டப்பட்டுள்ள சுப்பராயபுரம் தடுப்பணையின் இருகரைகளையும் பலப்படுத்தி மதகுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். அப்போது அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் உடனிருந்தார்.

    • கோரம்பள்ளம் வடிகால் கோட்ட பொறியாளர் உருவாட்டி கருமேனிஆற்றின் வழித்தடங்களை ஆய்வு செய்தார்.
    • மழைக்காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    உடன்குடி:

    உடன்குடிமற்றும் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மழைக்காலத்திற்குள் கருமேனிஆற்றின் நீர்வழிப்பாதைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்து தரவேண்டும் என்றுதொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதன் காரணமாக கோரம்பள்ளம் வடிகால் கோட்ட பொறியாளர் உருவாட்டி கருமேனிஆற்றின் வழித்தடங்களை நேரில் வந்து களஆய்வு செய்தார்.

    கருமேனிஆற்றின் சுப்ப ராயர்புரம் டைவர்ஷனுக்கு கீழ் உள்ள 1958-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள சடையனேரி தடுப்பணையில் உள்ள மணல்வாரி ஷட்டர் சேதமடைந்து உள்ளதையும்,

    அதனை அடுத்துள்ள கல்லானேரி-புல்லானேரி தடுப்பணைக்கு முன்பாக உள்ள 50 அடி நீளதடுப்புச் சுவர் சேதமடைந்து உள்ளதையும் கல்லானேரி-புல்லானேரி ஷட்டர்களில் ஒன்றுதிறக்க முடியாதபடி இறுகி போயிருப்பதையும், அதனை அடுத்த தடுப்பணை யை ஒட்டிய கால்வாய் கரைகள் இருபுறமும் சேதமடைந்து இருப்பதையும்,கல்லானேரிகுளத்திற்கு வரும் கால்வாய் வழித்தடத்தில் உள்ள தடுப்புச்சுவரை ஒட்டிய பகுதியில் உடைப்பு ஏற்பட்டுதண்ணீர் மீண்டும் ஆற்றிலேயே வீணாகசெல்லும் வகையில் சேதமடைந்து இருப்பதையும் நேரில் ஆய்வு செய்தார்.

    புல்லானேரி குளத்தின் மறுகால் தாண்டி தாங்கைக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் முன்பாக உள்ள வளைவில் கரை உடைந்துமீண்டும் கருமேனி ஆற்றினுள்ளேயே வீணாக தண்ணீர் செல்லும் வகையில் சேதமடைந்து இருப்பதையும் ஆய்வு செய்தார்.

    இவையணைத்தும் மழைக்காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாய நல சங்க தலைவர் சந்திரசேகரன், தாங்கைக்குளம் பாதுகாப்பு குழு தலைவர் ஜெயக்குமார், சிவலூர் ஜெயராஜ் உட்பட விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.

    ×