என் மலர்
நீங்கள் தேடியது "jackfruit"
- தனியார் எஸ்டேட்டில் பலாப்பழ சீசன் என்பதால் பலாப்பழகத்தை ருசிக்கும் நோக்கில் யானைகள் சுற்றி திரிகின்றன.
- அவ்வப்போது யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. இதனால் யானைகள் எப்போது வரும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர்.
அரவேணு:
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் இடையே குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட மாமர தனியார் எஸ்டேட் பகுதி உள்ளது.
அதில் 6 பெரிய யானை, 2 குட்டி யானைகள் முகாமிட்டு உள்ளது. தனியார் எஸ்டேட்டில் பலாப்பழ சீசன் என்பதால் பலாப்பழகத்தை ருசிக்கும் நோக்கில் யானைகள் சுற்றி திரிகின்றன. அங்குள்ள தொழிலாளர்கள் விரட்டினால் யானை கள் கோழிக்கரை கிராமத்துக்குள் புகுந்து விடுகின்றன.
மேலும் அவ்வப்போது யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. இதனால் யானைகள் எப்போது வரும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர். எனவே யானைகளை அங்கிருந்து விரட்ட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- விளைச்சல் அதிகரிப்பால் பலாப்பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கடும் நஷ்டத்தில் வியாபாரிகள் மூழ்கியுள்ளனர்.
- பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும்.இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.
கடலூர்:
பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும்.இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.
பண்ருட்டியை சுற்றியுள்ள காடாம்புலியூர், பலாப்பட்டு, நடுவீரப்பட்டு, கீழ்மாம்பட்டு, பணிக்கன் குப்பம், தாழம்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி நடைபெற்று வருகிறது.
தற்போது சீசன் தொடங்கி உள்ளது. எனவே தினமும் 10, 20 லாரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட டன்கள் பலாப்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும்சா லையில்பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குவியல்குவியலாய்லாக பலப்பழங்கள் வைத்து நூற்றுக்கணக்கானோர் விற்பனை செய்து வருகிறார்கள்.
இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டி கள்,பொதுமக்கள் பலாபழங்களைவாங்கி செல்கின்றனர்.
இந்த ஆண்டு பலாபழவிளைச்சல் அதிகம்என்பதால்இதன் விலை குறைந்துள்ளது . ஒரு பலா பழம் 100 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு ரூ. 300 வரை விலை போனது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பலா காயை பறிப்பதற்கான கூலி, அதை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகனச் செலவுக்கு ஈடான தொகை கூட கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் விவசாயிகள் பலா காயை பறிக்காமல் மரங்களிலேயே உள்ளோம் என்றனர்.
இதுகுறித்து பண்ருட்டி மண்டி உரிமையாளர் நடுபி ள்ளையார்குப்ப ம்பாலமுருகன் கூறுகையில் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் இதன் விலை போகவில்லை. தினசரி ஏராளமான பழங்கள் வெடித்து வீணாகிறது.
விலைகுறைந்ததால்வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் பலா பழம் வரத்து அதிகம் உள்ளதால் விற்க முடியவில்லை. வெளியூர்களுக்கு லோடு அனுப்பினாலும் அதை விட பலாப்பழ வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பலாப்பழத்தை யாரும் வாங்குவார் இல்லை. இதனால்தான் விலை வீழ்ச்சியை பலாப்பழம் கண்டு உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு பண்ருட்டி பகுதியில் பலாப் பழம் பதனிடும் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் என்றார்.
- செங்கோட்டை பகுதியில் பலாப்பழம் விலை உயர்ந்துள்ளது.
- தற்போது ஒரு பழம் ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்கப்படுகின்றன.
செங்கோட்டை:
முக்கனிகளில் ஒன்றான பழாப்பழம் ருசியில் தனிச்சிறப்புடையது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் அடிவாரத்தில் குறிப்பாக செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பலா மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் சுவை மிகுந்ததாக உள்ளது. ஆண்டிற்கு இருமுறை மட்டுமே பலன் தருவது பழாமரங்கள். தமிழகத்தில் செம்பருத்தி பலா, மஞ்சள் வர்க்கை, வெள்ளை வர்க்கை, வேர்பலா என பலா பலவகைகளில் காணப்படுகிறது.
செங்கோடடை பகுதியில் பழாப்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில் தற்போது வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது தொடர்பாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
சிறப்பு பெற்ற பலாமரங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பத்தால் வாடி வெம்பி கருகி விடுகிறது. இதற்கு தண்ணீர் பற்றாக்குறையே முக்கிய காரணமாக உள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது எடை மற்றும் சுளைகள் குறைந்து காணப்படுகின்றன. விளைந்த பழங்களை கொண்டுவர கூலியாக 3 அல்லது 4 பழங்களுக்கு ரூ. 300-க்கு மேல் செலவாகிறது.
அதனால் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஒரு பழம் ரூ. 50, ரூ. 100-க்கு விற்கபபட்ட நிலையில் தற்போது ஒரு பழம் ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்கப்படுகின்றன.
தற்போது கேரளாவில் இருந்து அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






