search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jackfruit"

    • நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை
    • தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன்

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரில் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "எத்தனையோ கட்சிகள் எத்தனையோ இடங்களில் போட்டியிடட்டும். நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை. வேலூர் மக்களுக்கும் என்னை விட்டால் வேறு வழியில்லை. நான் நல்ல வேலைக்காரனாக உழைப்பேன். உங்களுக்காக கழுதை போல பொதி சுமப்பேன்.

    இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேச்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை.

    ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன் என்று நகைச்சுவையாக பேசினார் மன்சூர் அலிகான்.

    • பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
    • தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் ஊடுபயிராக பலாப்பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தற்போது பலாப்பழ சீசன் என்பதால் அங்குள்ள மரங்களில் பழங்கள் காய்ந்து தொங்குகின்றன. இதனால் பலாப்பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களுக்கு திரண்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று கூடலூர் ஓவேலி பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தேயிலை-காப்பி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு விளைந்து நிற்கும் பலாமரங்களை நோட்டம் பார்த்தது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் மட்டும் காய்கள் பழுத்து தொங்குவது தெரியவந்தது. தொடர்ந்து பலாமரத்தின்கீழ் நின்றபடி தும்பிக்கை மூலம் பலாப்பழங்களை பறிக்க முயன்றது. ஆனாலும் மரத்தின் உச்சியில் பழங்கள் இருந்ததால் யானைக்கு எட்டவில்லை. தொடர்ந்து பலா மரத்தின் மேல் கால் போட்டு ஏறி நின்றுகொண்ட யானை, மீண்டும் துதிக்கையை உயர்த்தி மரத்தின் உச்சியில் விளைந்து தொங்கிய பலாப்பழங்களை பறித்தது. பின்னர் அந்த பழங்களை தரையில் போட்டு நாசூக்காக மிதித்தது. இதில் அந்த பழங்கள் பிளந்து, சுளைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. தொடர்ந்து பலாக்காய்களை லாவகமாக தூக்கி நிறுத்தி, இரண்டாக பிளந்த காட்டு யானை, அவற்றில் இருந்த பழச்சுளைகளை ஆசைதீர ருசித்து தின்றது. பின்னர் மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிட்டது.

    இந்த காட்சியை, அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    • கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
    • மலச்சிக்கல், செரிமான பிரச்சினையை சரிசெய்கிறது.

    முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் ஆரோக்கிய சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்..!

    பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், கால் சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

    பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்கிறது.

    பலா, குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குவதுடன், எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்சினை களையும் குணப்படுத்த உதவுகிறது.

     பலாப்பழம், ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் இருக்கும் கரோட்டினாய்டு சத்து, டைப்- 2 நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

    இதில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்கும். பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது. மேலும், உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

    பலாப்பழத்தில் காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, தைராய்டு ஹார்மோன் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் பி-6, ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டின் அளவைக் குறைத்து, இதய பிரச்சினைகளை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துகள், புது ரத்தத்தை உருவாக்குவதோடு, ரத்தசோகை பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

    • பலாக்கொட்டை, பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
    • ஒரு பிளேட்டில் சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேவையான பொருட்கள்

    பலாக்கொட்டை- ஒரு கப்

    பலாச்சுளை- ஒரு கப்

    பூண்டு - 4 பல் (பொடிதாக நறுக்கியது)

    இஞ்சி 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

    பச்சை மிளகாய் - 2 (பொடிதாக நறுக்கியது)

    கரம் மசாலாத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்

    சீரகத்தூள் - 4 டீஸ்பூன்

    கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்

    சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள்- டீஸ்பூன்

    உலர் பழங்கள்- 2 டேபிள் ஸ்பூன்

    சோளமாவு-தேவைக்கு ஏற்ப

    உப்பு - தேவைக்கு ஏற்ப

    எண்ணெய் - பொறிப்பதற்கு

    சட்னி தயாரிக்க:

    பலாக்கொட்டை - கப் (வேகவைத்தது)

    பச்சைமிளகாய் - 1

    உப்பு- தேவைக்கு

    எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்

    சட்னி செய்முறை

    பலாக்கொட்டை, பச்சைமிளகாய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும், அதைஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.

    பலாப்பழ கபாப் செய்முறை:

    ஒரு பிளேட்டில் சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் பலாச்சுளைகளை கட் செய்து போட்டு கலந்து சூடான எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும்.

    பலாக்கொட்டைகளை வேகவைத்து அதன் மேல் தோலை நீக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும். இந்த கலவையுடன் வேகவைத்த பலாக்கொட்டைகளை மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    இந்த விழுதுடன் பொடியாக நறுக்கிய உலர் பழங்களை சேர்த்து நன்றாக பிசையவும். இந்த கலவையை விரும்பிய வடிவில் தயார் செய்து, தவாவில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறலாம்.

    • மலைவாழ் மக்கள் காலை நேரங்களிலேயே பலாப்பழங்களை பறித்து மாலைக்குள் வீட்டில் இருப்பு வைக்காமல் விற்பனை செய்து வருகின்றனர்.
    • பலாப்பழம் வாசத்திற்காக வனப்பகுதிகளுக்குள் இருக்கும் யானைகள் தானாக வந்து பழங்களை லாவகமாக எடுத்து ருசித்து செல்கின்றன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலை பகுதிகளில் விளையும் ராகி, கம்பு பச்சைப்பயிர், தட்டைப்பயிர் உள்ளிட்ட தானிய வகைகளும் புளி, நிலக்கடலை உள்ளிட்ட பொருட்கள் மிகவும் ருசியாக இருக்கும்.

    மேலும் இங்கு இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்படுவதால் இந்த பயிர்களை நேரடியாக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து வாங்கி செல்கின்றனர். மற்றவைகளை வாரம்தோறும் அந்தியூரில் நடக்கும் வாரச்சந்தைகளுக்கு மலை வாழ் மக்கள் கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.

    இதில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியிருக்கும் நிலையில் இங்கு விளையும் பலாப்பழம் மிகுந்த ருசியாக இருப்பதினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து வாங்கி செல்கின்றனர். இந்த பழங்கள் அந்தியூர் தேர் நிலையம் அருகே மலைவாழ் மக்கள் கொண்டு வந்து பழங்களின் அளவிற்கு தகுந்தாற் போல் விலை நிர்ணயம் செய்து 200 முதல் 600 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப விற்பனை செய்து வருகின்றனர். இந்த பலாப்பழங்களை மலைவாழ் மக்கள் பறித்து தாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் வைக்கப்பட்டிருந்தால் இதன் வாசத்திற்காக வனப்பகுதிகளுக்குள் இருக்கும் யானைகள் தானாக வந்து பழங்களை லாவகமாக எடுத்து ருசித்து செல்கின்றன.

    இதனால் மலைவாழ் மக்கள் காலை நேரங்களிலேயே பலாப்பழங்களை பறித்து மாலைக்குள் வீட்டில் இருப்பு வைக்காமல் விற்பனை செய்து வருகின்றனர்.

    • கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது.
    • பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி அதிக மானதால் அதை விவ சாயிகள் கீழே கொட்டும் அளவிற்கு நிலைமை இருந்தது, இதனையடுத்து தர்மபுரி விவசாயிகள் தர்மபுரி வேளாண்மை விற்பனை மற்றும் வணி கத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) பாலசுப்பிர மணியத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அந்தக் கோரிக்கையை ஏற்று தர்மபுரியில் கூடுத லாக உற்பத்தியாகும் தக்கா ளியை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தக திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்து உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலமாக சேலத்தில் உள்ள சூரமங்க லம், அஸ்தம்பட்டி தாத காப்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர் ஆகிய உழவர் சந்தைகளில் வெள்ளோட்ட மாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. உழவர் சந்தைகளில் தர்மபுரி தக்காளி இதுவரை 150 டன் தக்காளி விற்பனை ஆகி உள்ளது. இதனை விவசா யிகளும் பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்,

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது. விவசாயிகள் பயனபெறும் வகையில் கடலூரில் உற்பத்தியாகும் பலாப்ப ழங்கள் சேலம் உழவர் சந்தை களில் தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்ய வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிர மணியம் நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதனையடுத்து நேற்று சூரமங்கலம் உழவர் சந்தையில் பலாப்பழம் விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரம ணியம் கலந்து கொண்டு பலாப்பழ விற்பனை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சூரமங்கலம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் பசுபதி, ஸ்ரீதேவி ,சரோஜினி உள்பட விவசாயிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஒரு சில வாரங்க ளில் மலைப்பிரதேசத்தில் விலை கூடிய பீட்ரூட், கேரட் பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய நடவ டிக்கை எடுத்து வருகிறோம். இதே போல் சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழம் பழங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

    • சேலம் மார்க்கெட்டில், பண்ருட்டி பலாப்பழம், கொல்லிமலை பலாப்பழம் மற்றும் கேரள பலாப்பழம் ஆகிய வகைகள் விற்பனைக்கு வருகின்றன.
    • தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழம் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டில், பண்ருட்டி பலாப்பழம், கொல்லிமலை பலாப்பழம் மற்றும் கேரள பலாப்பழம் ஆகிய வகைகள் விற்பனைக்கு வருகின்றன.

    பண்ருட்டி பலாப்பழம்

    தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழம் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. சீசன் காரணமாக பலாப்பழம் லோடு அதிகளவில் சேலத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

    சேலம் சத்திரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழ மண்டிகளில் பண்ருட்டி பலாப்பழங்கள், 5 கிலோ முதல் 40 கிலோ எடை வரையில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்வு செய்து தங்களுக்குப் பிடித்தமானவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

    மேலும் சில்லரை வியாபாரிகள் இங்கிருந்து வாங்கிச் சென்று சில்லரை விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    பலாப்பழம் வரத்து குறித்து கடைக்காரர்கள் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்று வட்டாரங்களில் விளையும் பலாப்பழம், தனித்த சுவை கொண்டது. தற்போது அறுவடை தொடங்கி உள்ளது.

    சேலத்தில் ஒவ்வொரு பழ மண்டிக்கும் தேவைக்கேற்ப 2 நாட்களுக்கு ஒருமுறை சராசரியாக 2 முதல் 4 டன் வரை பண்ருட்டி பலாப்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.

    போக்குவரத்து செலவு, நடைமுறை செலவு ஆகியவை அதிகரித்துவிட்டதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பலாப்பழத்தின் விலை அதிகரித்துவிட்டது.

    கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. பலாப்பழங்கள் ஒவ்வொன்றும் 5 கிலோ முதல் 40 கிலோ வரை எடையுடன் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் எஸ்டேட்டில் பலாப்பழ சீசன் என்பதால் பலாப்பழகத்தை ருசிக்கும் நோக்கில் யானைகள் சுற்றி திரிகின்றன.
    • அவ்வப்போது யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. இதனால் யானைகள் எப்போது வரும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர்.

    அரவேணு:

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் இடையே குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட மாமர தனியார் எஸ்டேட் பகுதி உள்ளது.

    அதில் 6 பெரிய யானை, 2 குட்டி யானைகள் முகாமிட்டு உள்ளது. தனியார் எஸ்டேட்டில் பலாப்பழ சீசன் என்பதால் பலாப்பழகத்தை ருசிக்கும் நோக்கில் யானைகள் சுற்றி திரிகின்றன. அங்குள்ள தொழிலாளர்கள் விரட்டினால் யானை கள் கோழிக்கரை கிராமத்துக்குள் புகுந்து விடுகின்றன.

    மேலும் அவ்வப்போது யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. இதனால் யானைகள் எப்போது வரும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர். எனவே யானைகளை அங்கிருந்து விரட்ட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • விளைச்சல் அதிகரிப்பால் பலாப்பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கடும் நஷ்டத்தில் வியாபாரிகள் மூழ்கியுள்ளனர்.
    • பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும்.இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.

    கடலூர்:

    பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும்.இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.

    பண்ருட்டியை சுற்றியுள்ள காடாம்புலியூர், பலாப்பட்டு, நடுவீரப்பட்டு, கீழ்மாம்பட்டு, பணிக்கன் குப்பம், தாழம்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது சீசன் தொடங்கி உள்ளது. எனவே தினமும் 10, 20 லாரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட டன்கள் பலாப்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

    பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும்சா லையில்பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குவியல்குவியலாய்லாக பலப்பழங்கள் வைத்து நூற்றுக்கணக்கானோர் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டி கள்,பொதுமக்கள் பலாபழங்களைவாங்கி செல்கின்றனர்.

    இந்த ஆண்டு பலாபழவிளைச்சல் அதிகம்என்பதால்இதன் விலை குறைந்துள்ளது . ஒரு பலா பழம் 100 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு ரூ. 300 வரை விலை போனது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பலா காயை பறிப்பதற்கான கூலி, அதை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகனச் செலவுக்கு ஈடான தொகை கூட கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் விவசாயிகள் பலா காயை பறிக்காமல் மரங்களிலேயே உள்ளோம் என்றனர்.

    இதுகுறித்து பண்ருட்டி மண்டி உரிமையாளர் நடுபி ள்ளையார்குப்ப ம்பாலமுருகன் கூறுகையில் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் இதன் விலை போகவில்லை. தினசரி ஏராளமான பழங்கள் வெடித்து வீணாகிறது.

    விலைகுறைந்ததால்வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் பலா பழம் வரத்து அதிகம் உள்ளதால் விற்க முடியவில்லை. வெளியூர்களுக்கு லோடு அனுப்பினாலும் அதை விட பலாப்பழ வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பலாப்பழத்தை யாரும் வாங்குவார் இல்லை. இதனால்தான் விலை வீழ்ச்சியை பலாப்பழம் கண்டு உள்ளது.

    எனவே தமிழ்நாடு அரசு பண்ருட்டி பகுதியில் பலாப் பழம் பதனிடும் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் என்றார்.

    • செங்கோட்டை பகுதியில் பலாப்பழம் விலை உயர்ந்துள்ளது.
    • தற்போது ஒரு பழம் ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்கப்படுகின்றன.

    செங்கோட்டை:

    முக்கனிகளில் ஒன்றான பழாப்பழம் ருசியில் தனிச்சிறப்புடையது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் அடிவாரத்தில் குறிப்பாக செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பலா மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

    இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் சுவை மிகுந்ததாக உள்ளது. ஆண்டிற்கு இருமுறை மட்டுமே பலன் தருவது பழாமரங்கள். தமிழகத்தில் செம்பருத்தி பலா, மஞ்சள் வர்க்கை, வெள்ளை வர்க்கை, வேர்பலா என பலா பலவகைகளில் காணப்படுகிறது.

    செங்கோடடை பகுதியில் பழாப்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில் தற்போது வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது தொடர்பாக செங்கோட்டை பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    சிறப்பு பெற்ற பலாமரங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்பத்தால் வாடி வெம்பி கருகி விடுகிறது. இதற்கு தண்ணீர் பற்றாக்குறையே முக்கிய காரணமாக உள்ளது.

    கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது எடை மற்றும் சுளைகள் குறைந்து காணப்படுகின்றன. விளைந்த பழங்களை கொண்டுவர கூலியாக 3 அல்லது 4 பழங்களுக்கு ரூ. 300-க்கு மேல் செலவாகிறது.

    அதனால் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஒரு பழம் ரூ. 50, ரூ. 100-க்கு விற்கபபட்ட நிலையில் தற்போது ஒரு பழம் ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்கப்படுகின்றன.

    தற்போது கேரளாவில் இருந்து அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×