என் மலர்
நீங்கள் தேடியது "IT Employee Suicide"
- மனம் உடைந்த பொன். கார்த்திக் யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த வாரம் பொன் கார்த்திக் தனது நண்பர் ஒருவரிடம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக புலம்பி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் கைகோல் பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையங்கிரி. இவரது மகன் பொன் கார்த்திக் (வயது 24). பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இவர் திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பணி நிமித்தமாக பொன் கார்த்திக், ரவி ஆனந்த் என்ற நண்பருடன் நவல்பட்டு போலீஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். வழக்கமாக காலையில் வேலைக்கு புறப்பட்டு செல்வார். மாலையில் வீடு திரும்புவார். நேற்று வெகு நேரமாகியும் கார்த்திக் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து மாலையில் உடன் வேலை பார்க்கும் நண்பர் இளவரசன் அவரை தேடிச் சென்றார். அப்போது அறையில் பொன் கார்த்திக் தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், இது பற்றி நவல்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், கடன் தொல்லையால் தற்கொலை செய்தது தெரியவந்தது. பொன் கார்த்திக்குக்கு ஆன்லைனில் கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரால் கடன் தொகையை திரும்பச் செலுத்த இயலவில்லை.
இதனால் மனம் உடைந்த பொன். கார்த்திக் யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கடந்த வாரம் பொன் கார்த்திக் தனது நண்பர் ஒருவரிடம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக புலம்பி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐ.டி. நிறுவன இன்ஜினியர் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது41). சாப்ட்வேர் என்ஜினீயர்.
இவரது மனைவி காயத்ரி (39). வீட்டின் அருகே உள்ள வடிவேல் தெருவில் மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் பொழிச்சலூர் மண்டல பா.ஜனதா மகளிர் அணி செயலாளராகவும் இருந்தார். இவர்களது மகள் நித்யஸ்ரீ (13), மகன் ஹரிகிருஷ்ணன்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரகாஷ், மரம் அறுக்கும் எந்திர ரம்பத்தால் தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்று விட்டு பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 19-ந்தேதி ஆன்லைனில் பிரகாஷ் ரம்பத்தை வாங்கி வைத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
அவர்கள் தங்களது திருமண நாளில் இந்த பரிதாப முடிவை எடுத்துள்ளனர். இறுதிநாளில் அவர்கள் சந்தோஷமாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்து உள்ளனர். பின்னர் கடற்கரை, ஓட்டலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் மனைவி உள்பட 3 பேரையும் கொன்று விட்டு பிரகாஷ் தற்கொலை செய்து உள்ளார். கழுத்தை அறுக்கும் முன்பு வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து கலந்து கொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரகாசின் இந்த கொடூர முடிவுக்கு கடன் தொல்லையே முக்கிய காரணம் என்று தெரிகிறது. அவர் வீடு கட்ட ரூ.27 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார்.
மேலும் கார் வாங்கவும், மனைவியின் மருந்து கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை நடத்தவும் கடன் வாங்கி இருந்தார். பிரகாஷ் மொத்தம் 9 பேரிடம் ரூ.80 லட்சம் வரை கடன் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனை அவர் வார வட்டிக்கு வாங்கி இருந்தார்.
ஆனால் பணத்தை பிரகாசால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் குடும்பத்தினை கொலை செய்து விட்டு தற்கொலை முடிவுக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து பிரகாசுக்கு கடன் கொடுத்தவர்கள் யார்-யார்?, கடைசியாக அவரிடம் யார் பேசினார்? என்பது குறித்து செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
பிரகாஷ் அதே பகுதியில் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை ரூ.9 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டு விட்டு அவர் ரூ.12 ஆயிரம் வாடகைக்கு குடியிருந்து உள்ளார்.
கடன் பிரச்சினை குறித்து பிரகாஷ் பெற்றோரிடம் கூறியபோது, அவர்கள் சொந்த வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரகாஷ் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. பிரகாசுக்கு கடன் கொடுத்தவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகிறோம்.
- ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறையினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை பலரும் கண்டு கொள்வதில்லை.
- இதற்கு உதாரணமாக நெல்லை அருகே, ஆன்லைன் செயலி ஒன்றில் ஒரே நாள் இரவில் ரூ.1 லட்சம் வரை இழந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை:
ஆன்டிராய்டு செல்போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலத்தில், நித்தம் நித்தம் உருவாகும் புது புது செயலிகளில் சில செயலிகள் மோசடிக்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக இளைஞர்களையும், சிறுவர்களையும் மையப்படுத்திய சில செயலிகள் அவர்களை ஆன்லைனில் அடிமையாக்குவதோடு, லட்சக்கணக்கில் பணத்தையும் கறந்து விடுகிறார்கள்.
இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறையினர் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனை பலரும் கண்டு கொள்வதில்லை.
இதற்கு உதாரணமாக நெல்லை அருகே, ஆன்லைன் செயலி ஒன்றில் ஒரே நாள் இரவில் ரூ.1 லட்சம் வரை இழந்த ஐ.டி.ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் தடி ஜெயசூர்யா(வயது 22). பி.டெக். பட்டதாரியான இவர் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே பண்டாரகுளத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த நண்பர் ஒருவரும் தங்கி உள்ளார்.
நேற்று காலை தனது நண்பரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு, அறைக்கு திரும்பிய ஜெயசூர்யா மாலை 5 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும்.
ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரது நண்பர் அவரை தேடி அறைக்கு சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவஇடத்திற்கு இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஜெயசூர்யா தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் அவரது செல்போனுக்கு ஒரு மேசேஜ் வந்ததும், அதில் மாடல் அழகியின் புகைப்படத்தை காட்டி, குறிப்பிட்ட ஒரு செயலியை டவுன்லோடு செய்யுமாறு அழைப்பு வந்ததும் தெரிய வந்தது.
அந்த செயலியை ஜெயசூர்யா டவுன்லோடு செய்துள்ளார். அதில் ஏராளமான மாடல் அழகிகளின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் இருந்துள்ளது. அந்த அழகிகளுடன் ஜாலியாக பேசுவதற்கு, பழகுவதற்கு, உல்லாசமாக இருப்பதற்கு என தனித்தனியாக பணம் நிர்ணயித்துள்ளனர்.
அதில் மணிக்கு ரூ.2500 முதல் ரூ.20 ஆயிரம் வரை இருந்ததாகவும், அவற்றில் சில அழகிகளின் பெயரில் ஜெயசூர்யா பணத்தை கட்டி உள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் சென்ற பின்னர் செயலியில் இருந்து உரிய பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் மீண்டும், மீண்டும் அந்த செயலியில் உள்ள பல்வேறு அழகிகளின் பெயரில் பணத்தை கட்டி ஒரே நாளில் ரூ.1 லட்சம் வரை கட்டி உள்ளார். ஆனால் பணத்தை இழந்தது மட்டுமே மிச்சம் ஆகி உள்ளது. குறிப்பிட்ட அழகிகளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதன் பின்னர் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இதனால் நேற்று காலை அவர் செயலியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தான் கட்டிய பணத்தை மட்டுமாவது திரும்ப தந்து விடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசியவர்கள் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






