search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPC"

    • மழைக்கால கூட்டத்தொடரின்போது அமித் ஷா மசோதாக்களை அறிமுகம் செய்தார்.
    • நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளுடன் மீண்டும் அவை அறிமுகப்படுத்தப்படும்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று முக்கியமான குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    இது தொடர்பான பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நயாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷியா 2023 ஆகிய மூன்று மசோதாகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இம்மசோதாக்கள் முறையே இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) 1973 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1987 ஆகியவைகளுக்கு மாற்றாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் முடிவு திரும்பப்பெற இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளுடன் மீண்டும் அவை (பழைய பெயர்) அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இனி பெண் நீதிபதிகளே விசாரிக்கும் வகையில் இந்திய கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. #MonsoonSession
    புதுடெல்லி:

    இந்திய தண்டனை சட்டத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ள தண்டனைகளை திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் இன்று விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே, 12 வயதுக்கு உள்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரெஜிஜு, “பலத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இனி பெண் போலீஸ் அதிகாரிகளே வாக்குமூலம் வாங்கும் வகையிலும், பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பெண் நீதிபதிகளே விசாரணை செய்யும் அம்சங்களும் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது” என கூறினார்.

    விவாதங்களுக்கு பின்னர் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். 
    ×