search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Introduce"

    • தேர்வு வசதியில் சிறிய தடங்கல் ஏற்பட்டதால் பாதிப்பு
    • இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொது மேலாளர் அறிவிப்பு

    கோவை,

    இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த 1-ந் தேதி தொலை தொடர்பு சேவை மாற்றப்பட்டதை தொடர்ந்து, ஐ.வி.ஆர்.எஸ். மாநில மொழி தேர்வு வசதியில் சிறிய தடங்கல் ஏற்பட்டது.

    தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு மீண்டும் தமிழ் மொழியில் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து, பதிவு செய்யலாம்.

    இந்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்துள்ளார். 

    ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்ற எச்சரிக்கை பொத்தானுடன் கூடிய செயினை அறிமுகம் செய்ய மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. #WomenSafety #Maharashtra #GPSNecklaces
    மும்பை:

    மராட்டிய மாநில சட்ட மேலவையில், பெண்கள் பாதுகாப்பு பற்றி விவாதம் நடந்தது. அதற்கு பதில் அளித்து உள்துறை மந்திரி தீபக் கேசர்கர் கூறியதாவது:-

    ஜி.பி.எஸ். சிப்பும், எச்சரிக்கை பொத்தானும் பொருத்தப்பட்ட விசேஷ செயினை மராட்டிய அரசு விற்பனைக்கு கொண்டு வரும். செயின் விலை ரூ.1,000 அல்லது அதற்கு குறைவாக இருக்கும். அதை பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

    ஆபத்தில் சிக்கும்போது, செயினில் உள்ள பொத்தானை அழுத்தி, பக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை உஷார்படுத்தலாம். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்படும் கண்காணிப்பு அறை மூலம் அந்த பெண்ணின் இருப்பிடத்தை அறிந்து அவரை மீட்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #WomenSafety #Maharashtra #GPSNecklaces
    கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. #NitiAayog #CookingSubsidy
    புதுடெல்லி:

    சமையல் கியாஸ் (எல்.பி.ஜி.) இணைப்பு பெற்றிருப்போருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் சந்தை விலைக்கு சிலிண்டர்களை வாங்கிவிட்டு அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் பெற்று வருகின்றனர். இந்த மானியம் எல்.பி.ஜி. சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு (ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்) மட்டும் வழங்கப்படுகிறது.

    ஆனால் பல நகரங்களில் மக்கள் குழாய்கள் மூலம் கியாஸ் இணைப்பு (பி.என்.ஜி.) பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதைப்போல பலர் இயற்கை எரிவாயு மூலமும் சமையல் செய்து வருகின்றனர். இவர்களும் கியாஸ் மானியம் பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றியமைக்க அரசு பரிந்துரைத்து உள்ளது.

    இதற்காக கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பரிந்துரையை செயல்படுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இது குறித்து அந்த அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘எல்.பி.ஜி. என்பது தனிப்பட்ட தயாரிப்பு. இதற்கு மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து எரிபொருளுக்கும் மானியம் வழங்க வேண்டும்’ என்றார். இந்த மாற்றம் ‘தேசிய எரிபொருள் கொள்கை 2030’-ல் இணைக்கப்படும் என தெரிகிறது.  #NitiAayog #CookingSubsidy #Tamilnews 
    ×