search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்ற எச்சரிக்கை பொத்தானுடன் செயின் அறிமுகம்
    X

    ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்ற எச்சரிக்கை பொத்தானுடன் செயின் அறிமுகம்

    ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்ற எச்சரிக்கை பொத்தானுடன் கூடிய செயினை அறிமுகம் செய்ய மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. #WomenSafety #Maharashtra #GPSNecklaces
    மும்பை:

    மராட்டிய மாநில சட்ட மேலவையில், பெண்கள் பாதுகாப்பு பற்றி விவாதம் நடந்தது. அதற்கு பதில் அளித்து உள்துறை மந்திரி தீபக் கேசர்கர் கூறியதாவது:-

    ஜி.பி.எஸ். சிப்பும், எச்சரிக்கை பொத்தானும் பொருத்தப்பட்ட விசேஷ செயினை மராட்டிய அரசு விற்பனைக்கு கொண்டு வரும். செயின் விலை ரூ.1,000 அல்லது அதற்கு குறைவாக இருக்கும். அதை பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

    ஆபத்தில் சிக்கும்போது, செயினில் உள்ள பொத்தானை அழுத்தி, பக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை உஷார்படுத்தலாம். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்படும் கண்காணிப்பு அறை மூலம் அந்த பெண்ணின் இருப்பிடத்தை அறிந்து அவரை மீட்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #WomenSafety #Maharashtra #GPSNecklaces
    Next Story
    ×