search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india border"

    • பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபெரோஸ்பண்டா பகுதியைச் சேர்ந்த ரோசினா என தெரியவந்துள்ளது.
    • பூஞ்சில் உள்ள சக்ரா தா பாக் என்ற இடத்தில் ரோசினா எல்லைக் கோட்டைக் கடந்த நிலையில் கைது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நேற்று இரவு கடந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த பெண் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபெரோஸ்பண்டா பகுதியைச் சேர்ந்த ரோசினா (49) என அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    பூஞ்சில் உள்ள சக்ரா தா பாக் என்ற இடத்தில் ரோசினா எல்லைக் கோட்டைக் கடந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

    எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரஷியாவில் இருந்து 600 அதிநவீன பீரங்கி டாங்கிகளை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. #Pakistanprocuringtanks #Indiaborder #600tanks
    இஸ்லாமாபாத்:

    பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு செய்தது.

    இதில் இருகட்டமாக ரஷியாவிடம் இருந்து T-90  உள்ளிட்ட சுமார் 600 பீரங்கி டாங்கி வாகனங்களை வாங்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

    இந்த பீரங்கிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரமுள்ள இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. இவை ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

    மேலும், இத்தாலியில் இருந்து ‘எஸ்.பி. மைக்’ ரகத்தை சேர்ந்த 245 அதிநவீன துப்பாக்கிகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளதாகவும் அவற்றில் 120 துப்பாக்கிகள் வந்து சேர்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. #Pakistanprocuringtanks #Indiaborder #600tanks 
    ×