என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய எல்லைக் கோட்டை தாண்டிய பாகிஸ்தான் பெண் கைது
    X

    இந்திய எல்லைக் கோட்டை தாண்டிய பாகிஸ்தான் பெண் கைது

    • பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபெரோஸ்பண்டா பகுதியைச் சேர்ந்த ரோசினா என தெரியவந்துள்ளது.
    • பூஞ்சில் உள்ள சக்ரா தா பாக் என்ற இடத்தில் ரோசினா எல்லைக் கோட்டைக் கடந்த நிலையில் கைது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நேற்று இரவு கடந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த பெண் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஃபெரோஸ்பண்டா பகுதியைச் சேர்ந்த ரோசினா (49) என அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    பூஞ்சில் உள்ள சக்ரா தா பாக் என்ற இடத்தில் ரோசினா எல்லைக் கோட்டைக் கடந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

    Next Story
    ×