search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inaugrates"

    • நெல்லை மாவட்டம் வள்ளியூரில் டி.டி.என். கல்வி குழுமம் சார்பில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வள்ளியூல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
    • கல்லூரி நூலகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் திறந்து வைத்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் டி.டி.என். கல்வி குழுமம் சார்பில் நேரு நர்சிங் கல்லூரி, ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்நிறுவனத்தின் சார்பில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வள்ளியூல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தாளாளர், செயலாளர் ஹெலன் தலைமை தாங்கினார். தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு புதிய கல்லூரியை திறந்து வைத்தார்.

    கல்லூரி நூலகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் திறந்து வைத்தார். வள்ளியூர் பங்குதந்தை ஜான்சன் ஆசியுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்கம் மண்டல இணை இயக்குநர் பாஸ்கரன், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை, வடக்கு வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், சென்னை டயோனோமிக் இயக்குநர் வெல்லிங்டன், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜா, ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் மார்க்கரெட் ரஞ்சிதம், வார்டு கவுன்சிலர் உஷா, மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ், வேளாண்மை துறை துணை இயக்குனர் ஸ்டேன்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கிகாரம் பெற்ற மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் வணிக வேளாண்மையியல் தொடங்கப்பட்டுள்ளது.

    அனைத்து பகுதிகளில் இருந்தும் கல்லூரிக்கு இலவச பேருந்து வசதிகள் உள்ளது.

    இக்கல்லூரியில் அனுப வமிக்க பேராசிரியைகள், காற்றோட்டமான வகுப்பறைகள், விளையாட்டு அரங்கம், மின் நூலகம், வேலைவாய்ப்பு மையம், முழுமையான பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் உள்ளது.

    • வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நிலையம் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார்.

    கோவில்பட்டி:

    வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நிலையம் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து குடிநீர் இயந்திரத்தை பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மருத்துவர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், பால் நுகர்வோர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோபி, முருகன், பழனிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக அங்கு தனியாக ஆயுதப்படை மைதானம் அமைக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
    • குற்றாலம் போலீஸ் நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆயுதப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உதயமானது. இதனை தொடர்ந்து அங்கு கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து துறை அலுவலகங்களும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    ஆயுதப்படை

    இந்நிலையில் மாவட்டத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக அங்கு தனியாக ஆயுதப்படை மைதானம் அமைக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் குற்றாலம் போலீஸ் நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆயுதப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர் ஆயுதப்படை வளாகத்தை ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். அப்போது பணியின் போது விழிப்புடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று ஆயுதப்படை போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி அவர்களின் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தலைமையில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 தலைமை காவலர்கள், 2 முதல் நிலை காவலர்கள், 2-ம் நிலை ஆண் காவலர்கள் 150 பேர், 60 இரண்டாம் நிலை பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 222 போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×