search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor's Visit"

    • பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ரவி குடும்பத்துடன் வருகை தந்தார்.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ரவி குடும்பத்துடன் வருகை தந்தார். கவர்னருக்கு வரவேற்பு அளிப்பதாக தேசிய கொடியுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் பஸ் நிலையத்தின் முன்பு கூடிய போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளாக மாறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று 1 மணி நேரத்திற்கு பின்னர் கவர்னருக்கு வரவேற்பு அளிக்க அனுமதி அளித்து விடுவித்தனர்.

    போலீசாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், நகர தலைவர் ராமசந்திரன், இளைஞர் அணி நிர்வாகி ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் முத்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் பழனி பஸ் நிலையம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட த்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்த னர். கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சி தானந்தம், நகரச் செயலாளர் கந்தசாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜ மாணி க்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருவளவன், நகர செயலாளர் மணவாளன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அனுமதி இன்றி ஒன்றுகூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக யோகா தின விழா நாளை நடைபெற உள்ளது.
    • வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது வீட்டை பார்வையிடுகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக யோகா தின விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக காரில் இன்று இரவு 7.30 மணிக்கு சிதம்பரம் வருகிறார். இன்று இரவு அண்ணாமலை பல்கலைக் கழ க விருந்தினர் விடுதியில் தங்குகிறார். நாளை (புதன்கிழமை) பல்கலைக் கழக விளையாட்டு மைதா னத்தில் நடைபெறும் உலக யோகா தின விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார்.

    நாளை மதியம் 3.30 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வள்ளலார் பிறந்த இடமான மருதூர் செல்கிறார். அதனை தொடர்ந்து வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது வீட்டை பார்வையிடுகிறார். இதனை தொடர்ந்து வடலூரில அநை்துள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்று வழிபடுகிறார். பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    • ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு
    • நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் கருப்பு கொடி போராட்டம்.

    நெல்லை:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை டவுன் ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று வந்தார்.

    அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கொக்கிரகுளம் கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    இதையறிந்த உதவி கமிஷனர்கள் அண்ணா–துரை, விவேகானந்தன், பாளை இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் விரைந்து சென்று கருப்பு கொடியை அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×