search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் வருகையில் மோதல்  பா.ஜ.க., வி.சி.க. நிர்வாகிகள் மீது வழக்கு
    X

    கோப்பு படம்

    கவர்னர் வருகையில் மோதல் பா.ஜ.க., வி.சி.க. நிர்வாகிகள் மீது வழக்கு

    • பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ரவி குடும்பத்துடன் வருகை தந்தார்.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ரவி குடும்பத்துடன் வருகை தந்தார். கவர்னருக்கு வரவேற்பு அளிப்பதாக தேசிய கொடியுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் பஸ் நிலையத்தின் முன்பு கூடிய போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளாக மாறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று 1 மணி நேரத்திற்கு பின்னர் கவர்னருக்கு வரவேற்பு அளிக்க அனுமதி அளித்து விடுவித்தனர்.

    போலீசாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், நகர தலைவர் ராமசந்திரன், இளைஞர் அணி நிர்வாகி ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் முத்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் பழனி பஸ் நிலையம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட த்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்த னர். கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சி தானந்தம், நகரச் செயலாளர் கந்தசாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜ மாணி க்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருவளவன், நகர செயலாளர் மணவாளன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அனுமதி இன்றி ஒன்றுகூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×